Showing posts with label புஞ்சை உண்டு நஞ்சை உண்டு. Show all posts
Showing posts with label புஞ்சை உண்டு நஞ்சை உண்டு. Show all posts

Thursday, January 26, 2012

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பாடல்: புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு
வஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - இந்த
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
வீதிக்கொரு கட்சியுண்டு சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - மனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது
நாடா இல்ல வெறும் காடா - இதைக்
கேட்க யாரும் இல்ல தோழா

(புஞ்சை உண்டு)

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்துக் கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு உழைக்கும் கூட்டமே
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

(புஞ்சை உண்டு)

ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
????? நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே தண்ணொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
?????
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா

(புஞ்சை உண்டு)