Wednesday, November 4, 2009

காதோடுதான் நான் பாடுவேன்

பாடியவர் - எல்.ஆர்.ஈஸ்வரி
படம் - வெள்ளி விழா

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்...

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடுதான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

பூங்கொடி தான் பூத்ததம்மா

டம் - இதயம்
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா

ஆசைக்குத் தாள் போட்டு அடைத்தென்ன லாபம்?
அது தானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று
பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா

தாய் கூட அழுகின்ற பிள்ளைக்குத் தானே
பசி என்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன் வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன?
ஊமைக்குப் பாடலென்ன?
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

படம் : புதையல்
குரல் : சி.எஸ்.ஜெயராமன்+சுசீலா
பாடல் : மாயவநாதன்
இசை : வி-ரா
நடிகர்கள்: சிவாஜி+பத்மினி

விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணொடு கொஞ்சும்
கலை அழகே இசையமுதே..
இசையமுதே.....

(விண்ணோடும்)

அலைபாயும் கடலோரம்
இளமான்கள் போலே
விளையாடி.... இசைபாடி...
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

தேடாத செல்வ சுகம்
தானாக வந்தது போல்
ஓடோடி வந்த
சொர்க்க போகமே
ஓடோடி வந்த
சொர்க்க போகமே

காணத இன்ப நிலை
கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும்
யோகமே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

சங்கீதத் தென்றலிலே
சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே

மங்காத தங்கம் இது
மாறாத வைரம் இது
ஒன்றாகி இன்ப கீதம்
பாடுதே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

படம்: உயிரே
குரல்: உன்னிமேனன், சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து

ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா

பூங்காற்றிலே...

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே
ஓடோடி வா...

பூங்காற்றிலே...

கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை

வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா

பூங்காற்றிலே...

தோழா தோழா கனவுத் தோழா

படம் - பாண்டவர் பூமி
பாடியவர்கள் - யுகேந்திரன் சுஜாதா

தோழா தோழா
கனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும்
பழகிக்கிட்டால் காதலாகுமா
அது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது

நட்பு என்னும் நூலெடுத்து
பூமியில் கட்டி நீ நிறுத்து
நட்பு நட்புதான் காதல் காதல்தான்
காதல் மாறலாம் நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை
காதல் இன்றி மனிதன் இல்லை
நண்பர்களும் காதலராக
மாறிய பின் சொல்லியதுண்டு

இப்ப நீயும் நானும் பழகுறோமே
காதலாகுமா
இது ஆயுள் முழுதும் தொடர்ந்தாலும்
நட்பு மாறுமா?

தோழா தோழா
கனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்

நீயும் நானும் வெகுநேரம்
மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும்
பிரியும் பொழுதில் சில நொடிகள்
மெளனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல் இல்லையடி
பிரிதலில் காதலைச் சொல்லி விடு

காதல் காதல்தான்
நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே
காதல் வளருமே!

பிரிந்து போன நட்பினைக் கேட்டால்
பசுமையான கதைகளைச் சொல்லும்
பிரியமான காதலும் கூட
பிரிந்த பின்னே ரணமாய்க் கொல்லும்

ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்
ஆ... இது correct
ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்

தோழா தோழா
கனவுத் தோழா
தோழா தோழா
தோள்கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்
நட்பைபப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கணும்.
உன்னை நான் புரிஞ்சுக்கணும்
ஒன்னொண்ணா தெரிஞ்சிக்கணும்
ஆணும் பெண்ணும்
காதலில்லாமல் பழகிக்கலாம்
அது ஆயுள் முழுதும்
களங்கப்படாமல் பார்த்துக்கலாம்

கண் போன போக்கிலே கால் போகலாமா?

படம்: பணம் படைத்தவன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?