Wednesday, July 26, 2017

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை

படம் : ஏப்ரல் மாதத்தில்

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள
யார் இடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல ?
திட்டம் இட்டே நாம் செய்த குற்றம் என்ன ?
போராட காலம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே நீ நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

உன் தேவை நான் என்றும் தாங்கி கொள்ள
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல ?
என் உள்ளம் தடுமாறுதே
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும் வரும் சொர்கமே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

Sunday, April 26, 2015

அதிசய ராகம்

அதிசய ராகம்
ஆனந்த ராகம்
அழகிய ராகம்
அபூர்வ ராகம்
(அதிசய...)


வசந்த காலத்தில்
மழை தரும் மேகம் - அந்த
மழை நீர் அருந்த
மனதினில் மோகம்

இசை எனும் அமுதினில்
அவளொரு பாகம் (2)
இந்திர லோகத்துச்
சக்கரவாகம்
(அதிசய...)


பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்

தேவர்கள் வளர்த்திடும்
காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால்
அது என் யோகம் (2)

ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால்
காவிரி மாதவி

முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொளி
முழுவதும் பார்த்தால்
அவளொரு பைரவி
அவளொரு பைரவி
அவளொரு பைரவி

கண்ணனுக்கு என்ன வேண்டும்

கண்ணனுக்கு என்ன வேண்டும்
கண்ணனுக்கு என்ன வேண்டும்
தினமும் உதிக்கும் பொன்மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல்மலரோ
உன்னை எண்ணி ஏங்கித் தவிக்கும்
உள்ளம் என்னும் மலரோ
சொல்லு கண்ணா... சொல்லு கண்ணா... சொல்லு கண்ணா...
(கண்ணனுக்கு...)


நதி வழி ஓர் ஓடம் போவது போலே
விதி வழி என் உள்ளம் உன் புகழ் பாடும்
தூரிகைகள் தீட்டாத ஓவியம் நீயே
பாரில் உனைப் பாடாத காலங்கள் வீணே
உன்னைப் போற்ற மண்ணின் மீது
உள்ளம் உண்டு கோடி கோடி (2)
உந்தன் உள்ளம் என்னவென்று சொல்லு கண்ணா...
(கண்ணனுக்கு...)


அல்லும் பகல் தோறும் உன் ஸ்ரீகிருஷ்ண கானம்
உள்ளமதில் உருகாமல் போனால் என்னாகும் (2)
வெண்ணிலவில் நதியோரம் வேங்குழல் ஓசை
என்னையது தாலாட்ட ஏங்குது ஆசை
கீதகோவிந்த கிருஷண கிருஷணா
நாத வேதங்கள் கிருஷண கிருஷணா
பாதவிந்தங்கள் போற்றி கிருஷ்ணா
யாதுமாய் நின்ற கிருஷ்ணா
(கண்ணனுக்கு...)