Saturday, October 23, 2010

இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்

திரைப்படம்: வா ராஜா வா
இயற்றியவர்: நெல்லை அருள்மணி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
ஒன்றும் நடப்பதில்லை

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
இறைவன் ஒன்றாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இறைவன் மனமாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

Friday, October 22, 2010

ஆசையக் காத்துல தூது விட்டு

ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு - குயில்
கேக்குது பாட்ட நின்னு

..........ஆசையக் காத்துல..........

வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில

..........ஆசையக் காத்துல..........

தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில

..........ஆசையக் காத்துல..........

ஆறுயிரே ஆறுயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

ஆறுயிரே ஆறுயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
எண்ணி பிரிகிறேன்

ஆறுயிரே ஆறுயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
காற்றினில் வருவேனோ
சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போது வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
உயிரே என்னுயிரே
உனக்குமள் என்னுயிரே
உனை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னில் உறைகிறேன்

ஆறுயிரே ஆறுயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்
நேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

மேகமது சேராது வான் மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே உனை எண்ணி இளைத்தேனே
மேல் இமையும் வாராது கீழ் இமையும் சேராது
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ள போதும் வார்த்தையொன்று சொல்ல வேண்டும்
வார்த்தைகள் வந்து சேரும் போது நாணம் என்னை கட்டி போடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிடுமே

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சினுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒரு கோடி நீ கொடு என் தோழி
அன்பை தந்து என்னை நீயும் தாங்கிக்கொண்டு நாட்களாச்சு
பூவைத் தொட்ட பின்புதானே முட்கள் கூட பூக்கள் ஆச்சு
விரல்கள் கொண்டு நீயும் பேசினால் விறகும் வீணையாகும்

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே

மழை தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா
குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா
நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா
விடிகாலை வேளை வரை என் வசம் நீ சம்மதமா
இடைவேளை வேண்டுமென்று விடை கேட்கும் சம்மதமா
நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா
என்னுயிரில் சரி பாதி நான் தருவேன் சம்மதமா

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே

இமையாக நான் இருப்பேன் சம்மதமா சம்மதமா
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா
கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
கண் மூடி தவம் இருப்பேன் சம்மதமா சம்ம்தமா
ஒரு கோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
பிரியாத வரம் ஒன்றை தர வேண்டும் சம்மதமா
பிரிந்தாலும் உனை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே


ப்ரியமானவளே
ப்ரியமானவளே..

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது
நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது
தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விலங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விலங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்


சந்திர சூரியர் எழுகையிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே சரிகிறதே
அடி விண்ணும் மண்ணும் உணக்குள்ளே விளம்பரமோ
நீ வெளிச்சத்தில் செய்து வைத்த ஒளி சிற்பமோ
ஹேய் மன்மத மொட்டோ நான் வருடும் காற்றோ
என் காதலி காதலி காதலி காதலி
என்னை காதலி காதலி காதலி

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விலங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்


உன்முகம் கொண்ட பருவினிலும்
விண்மீன் ஒளிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி என்னை கொல்லுதடி
எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்
அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்
மனம் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே

காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோடு ஒட்டிக் கொள்ளும் பட்டு ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை கண்டு கனியோ
என் காதலி காதலி காதலி காதலி..

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
(ஏதேதோ..)

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு
(ஏதேதோ..)

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா
நீயே அணைக்கவா
தீயை அணைக்கவா
நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும்
இந்த அன்பு போது
(ஏதேதோ..)

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

தானன தனனானா.... நா
தானன தனனானா...

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

கால் கடுக்க காத்திருந்தேன்
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே
காரணத்தை நானறியேன்
தினசரி நான் பார்த்த தாமரப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென் பாவம்
ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோஹம்
என்றும் நானும் கொண்ட மோஹம்

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ
ஹா ஆ ஆ ஆஅ ஆ ஆ ஆ ஆ

நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தல்லொண்ணு ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றியொண்ணு வாடுதங்கே
இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து
இடைவெளி இல்லாமல் போனது காத்து
நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இள நாத்து
ஓடை நீரின்றி வாடும் இள நாத்து

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா

காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
ஹே ஹே ஹே ...
கண்கள் சொல்வது வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
ந ந ந நா .....

கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள்தான் சகியே
ந ந ந நா .....
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே
ந ந ந நா .....

அடடா இன்னும் என் நெஞ்சம்
புரியலையா? காதல் மடையா?
இது என்னடி இதயம் வெளியேறி
அலைகின்றதே காதல் இதுவா..?
எப்படி சொல்வேன் புரியும் படி ஆளை விடுடா
மன்னிச்சுக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி

படபடக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும்
சொல்வது சரியா?
தவறு செய்தால்.. முத்தம் தந்தென்னை
திருத்திக்கனும் தண்டனை சரியா?

எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய்
சொல்லிவிடுடா

சொல்லுகிறேன் இப்போதொரு
முத்தம் கொடுடி

தெரியாம பார்த்துப்புட்டேன் உன்னை தெரிஞ்சே தான் மாட்டிக்கிட்டேன்

தெரியாம பார்த்துப்புட்டேன் உன்னை
தெரிஞ்சே தான் மாட்டிக்கிட்டேன்
ஓ..
(தெரியாம..)
என்ன நடக்க போகுதோ
எங்கு முடிய போகுதோ
தொல்லையா ஆச்சுடி
தூக்கமே போச்சுடி
(தெரியாம..)

ஹிட்லர் போல உங்க அண்ணன்
இம்சை பண்ணுரானே என்னை
ரொம்ப பாசம்தான் என் மேலத்தான்
அவன் உயிரே நான் தான் தெரியுமா?
அத சொன்னா உனக்கு புரியுமா?
சொல்லு சொல்லு என் செல்லம் செல்லம்
நீ சொல்லாக்காட்டி நான் டூ கா செல்லம்
கண்ணில் சிறு தூசு பட்டால்
காத்த கூட நிறுத்தி வெப்பான்
காலில் ஒரு முள்ளு தெச்சா காட்ட கொலுத்துவான்
ஹையோ ஹையோ
(தெரியாம..)

காதல் என்பது கோட்டை
அந்த கனவு தெறந்துட்டா வேட்ட
உள்ள போவோமா வெல்லம் கசக்குமா?
நான் இரும்புல செஞ்ச எறும்புடி
இனி விடியிற வரைக்கும் குறும்புடி
வேணாம் வேணாம் என் செல்லம் செல்லம்
அண்ணன் பார்த்தா உன்னை கொல்லும் கொல்லும்
உன் அண்ணை என்ன பிஸ்தா பருப்பா?
காதலுன்னா ஏண்டி வெறூப்பா?
என் மேல தான் ககிய வச்சா
சங்கே அறுப்பேன்டி

நீ என்பது எதுவரை? எதுவரை?

நீ என்பது எதுவரை? எதுவரை?
நான் என்பது எதுவரை? எதுவரை?
நாம் என்பதும் அதுவரை அது வரைதான்
வாழ்வு என்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்

நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது

ஏதோ நான் இருந்தேன், என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன், அன்பே சொல் மூச்சை என் பரிதாய்?
இரவு இங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே?
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே?
உறுகினான் நான் உறுகினேன், இன்று உயிரில் பாடி கருகினேன்
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது?

வேரில் நான் அழுதேன், என் பூவும் சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை
உனக்கு என்றே உயிர் கொண்டேன், அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவேன்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா?

நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது

வசந்த சேனா வசந்த சேனா

வசந்த சேனா வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள் தானா
நீயிள்லாது நான் என்ன நானா
சேனா வசந்த சேனா
ஒ மதன சேனா மன்மத சேனா
என்னக்குள் எதையோ திருடி சென்றானா
காதல் ஊருக்கு வழி இதுதான சேனா

(வசந்த சேனா ...)


அணுவாய் அணுவணுவாய் என் அழகை குடித்தவனே
அணு சக்தியாய் இருந்து என் உயிரை வளர்த்தவனே
காதல் சங்கிலியால் சிறையில் அடைத்தவளே
அடிமை சாசனத்தை எழுதி கேட்டவளே
என் இமைகள் இரண்டை விடுமுறைக்கு அனுப்பி
இரவில் தூக்கம் கேடுதவானே
இதயம் நிரம்பிய கஜானா போல
கொஞ்ச கொஞ்சமாக கரைதவானே
காதல் இது தானே , தோழி காதல் தோழி

(மதன சேனா ...)

உயிரில் உயிர் புதைத்து புதையல் எடுத்தவளே
உருவம் இனி எதற்கு என விளக்கம் கொடுத்தவளே
பொய்யால் ஒரு மொழியில் என் மெய்யை வளைத்தவனே
கொய்யாதொரு கனியை கண்ணால் கொய்தவானே
பகலை சுருக்கிட இரவை தொடர்ந்திட யுக்தியை வகுத்திடு நாயகியே
கனிவாய் பிறந்தொரு துளியாய் விழுந்திட
துணையாய் இணைவாய் வாசகியே
காதல் இது தானே , தோழா காதல் தோழா

(வசந்த சேனா ...)

சுடும் நிலவு சுடாத சூரியன்

சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா (எல்லாம்)
காதலித்துப் பார்... காதலித்துப் பார்..


இமையடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்
காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதியிருந்தாலும் நாவே உலரும்
தப்பு எல்லாம் கணிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்
நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

சுடும் நிலவு சுடாத சூரியன்.

மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்
காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்
தொட்ட பாகம் மோட்சமாகும்
மற்ற பாகம் காய்ச்சலாகும்
தெய்வம் தூங்கி மிருகமாகும்
மிருகம் தூங்கி தெய்வமாகும்
தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம்

தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக ?
தேவியே என் ஜிவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கேனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா ?
நான் சத்தியம் செய்யவா ?


இந்த பூமியே தீர்ந்து போய் விடில் என்னை எங்கு சேர்ப்பாய் ?
நட்சத்திரங்களை தூசி தட்டி நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூடில் நான் உருகி போய் விடில் என் செய்வாய் ?
உருகிய துளிகளை ஒன்றாக்கி என்னுயிர் தந்தே உயிர்ததருவேன்
ஏ ராஜா இது மெய் தானா ?
ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில் முள் இருந்தால்
நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை

தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக ?
தேவியே என் ஜிவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கேனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா ?
நான் சத்தியம் செய்யவா ?

நீச்சல் குலம் இருக்க நீரும் இல்லை இதில் எங்கு நீச்சல் அடிக்க?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லி ராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என் பாடு ?
காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைதி செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
ஏ ராணி அந்த இந்திரலோகத்தை நான் கொண்டுதருவேன் நாள் ஒரு பூவிதம்
உன் அன்பு அதுபோதும்


தொட தொட எனவே வானவில் என்னை தூரத்தில் அழைகின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோவில் போல் இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜிவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கேனம் காப்பாய்?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா ? நான் சத்தியம் செய்யவா ?

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?
சந்திப்போமா? நெப்டனலில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே

அந்த மெரினா பீச் சிறு படகடியில்
ஒரு நிழலாகி நாம் வசிப்போமா
காபி டே போகலாம் சோனோ பெளலிங் ஆடலாம்
போன் சண்டை போடலாம் பிலியர்ட்சில் சேரலாம்
மீட்டீங் நடந்தால் இனி டேட்டிங் நடக்கும்
ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் கீரிமை பாதி பாதி திண்ணலாம் எப்படா…..

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?
சந்திப்போமா? நெப்சூனலில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே

யார் புன்னகையும் உன் போல் இல்லையடா
யார் வாசனையும் உன் போல் இல்லையடா
அய்யோ ஆனதே ஆனந்தம் போனதே
ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை சிரிப்புக்குள் வேதனை
போடி வராதே மணம் போனால் வராதே
உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட வேதனைகள் தருகிறாய் போதுமே……

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?
சந்திப்போமா? நெப்சூனலில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா

சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென

சில்லென்ற தீப்பொறி ஒன்று சிலு சிலு சிலுவென குளு குளு குளுவெந
சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா?

இதோ உன் காதலன் என்று விறு விறு விருவென கல கல களவென
அடி மன வெளிகளில் ஒரு நதி நகருது கேட்டாயா

உன் மெத்தையில் தலை சாய்கிறேன் உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன் என்னென்னவோ பண்ணுதெ
தித்திக்குதே ... தித்திக்குதே ...
தித்திக்குதே ... தித்திக்குதே ...தித்திக்குதே ... தித்திக்குதே ... நா நா நா நா நா நா


கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தொய்வதும்
கண்ணா உன் கால் உறை உள்ளே என் கைகள் நான் தொய்ப்பதும்
உயிர் ஊர நான் தேன் பாய் வதும்
உயிரோடு நான் தேய்வதும்
முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைக்கும் கொப்பைகளும்
தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே மூகாமிடும் கோபங்களும் ஓ...
தித்திக்குதே ... தித்திக்குதே ...


அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவொடு நான் எரிவதும் பகலொடு நான் உறைவதும்

நீ வாழும் அரை தனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலருவதும் நோய் கொண்டு நான் அழுவதும்

ஆக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓ...
தித்திக்குதே ... தித்திக்குதே ...
தித்திக்குதே ... தித்திக்குதே ... தித்திக்குதே ... தித்திக்குதே ... நா நா நா நா நா நா

மயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...

மயிலிறகே... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல...
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா...

உயிரை தொடர்ந்து வரும்
நீதானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே...
மயிலிறகாய் மயிலிறகாய்
வருடுகிறாய் மெல்ல

மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா...


மதுரை பொதிகை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா...மெதுவா..மெதுவா...
இங்கு வைகையில் வைத்திடு கை

பொதிகை மலையை பிரித்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனசிறையில்...

ஓர் இலக்கியம் நம் காதல்..
வான் உள்ள வரை வாழும் பாடல்

மயிலிறகே.... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா.....

உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே.....
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே....

(இசை..)

தமிழா தமிழா தமிழா
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்தாய்...
கவி ஆற்றிட நீ வருவாய்........

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா........?

பால் விளக்கங்கள் நீ கூறு
ஊர் உறங்கட்டும் உறைப்பேன் கேளு

மயிலிறகே.... மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா.....

உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கண் எழுத்து அன்பே...

மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல

வருடுகிறாய்... மெல்ல

வருடுகிறாய் மெல்ல...

வருடுகிறாய்....மெல்ல

வருடுகிறாய் மெல்ல...

என் காதலே என் காதலே.....

என் காதலே என் காதலே.....
என்னை என்ன செய்யப் போகிறாய்?.....
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ......
ஏன் கண்ணிரண்டைகேட்கிறாய்?........
சிலுவைகள் சிறகுகள்....
ரெண்டில் என்ன தரப் போதிறாய் ?.....
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு ,
ஏன் தள்ளி நின்று பார்கிறாய் ?.....

காதலே நீ பூ எறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்,
காதலே நீ கல் எறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா....... இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா....... இல்லை போவதா
அமுதென்பதா..... விஷம் என்பதா.........
உன்னை அமுத-விஷமென்பதா? ........

காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து அழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா..... தடுமாற்றமா ?.......
என் நெஞ்சிலே...... பனி மூட்டமா ? ......
நீ தோழியா? இல்லை எதிரியா ?
என்று தினமும் போராட்டமா?......
என் காதலே.. என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய் ?.......

உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்

உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்
கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்
காத்தடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

கண்ணிரெண்டில் நான் தான் காதலெனும் கோட்டை
கட்டிவைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை எல்லாம் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்தங்கமே ஞான
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே

மலரே...மௌனமா..

மலரே...மௌனமா..
மௌனமே வேதமா...
மலர்கள்... பேசுமா....
பேசினால் ஓயுமா... அன்பே

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா
விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா

மலரே...மௌனமா..
மௌனமே வேதமா...
மலர்கள்... பேசுமா....
பேசினால் ஓயுமா... அன்பே


கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
உறவின் உறவே
உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே

மலரே...மௌனமா..
மௌனமே வேதமா...
மலர்கள்... பேசுமா....
பேசினால் ஓயுமா... அன்பே

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்
கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்
பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில்
நிழலையும் காணவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூண்டிலிட்டு
காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்
கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட
காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்
பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று
அந்த கண்ணி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை
வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன்
பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின்
நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு
கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு
கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கறையும்முன்
உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா வா வா
கண்ணீரில் உயிர் துடிக்க
கண்ணா வா உயிர் கொடுக்க..

வளையப்பட்டி தவிலே தவிலே

நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா


வளையப்பட்டி தவிலே தவிலே
ஜுகல்பந்தி வைக்கும் மவளே மவளே
அடி ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்னை மயக்குறியே மயக்குறியே

நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா

(வளையப்பட்டி தவிலே)

உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிரிப்போ சிந்துபைரவி
நீ பார்க்கும்போது பாக்யஸ்ரீ
நீ கொஞ்சும்போது நீலாம்பரி

நான் திருவையாறு கச்சேரி
நீ தாளம் போடு பித்தேறி
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி

(வளையப்பட்டி தவிலே)


நீ பார்க்கும்போதே பத்திக்குதே
சொந்த ஊரு சிவகாசியா
பேசும் போதே ஜில்லுங்குதே
உங்க ஊரு சிரபுஞ்சியா

நீ நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முருக்கேறுதே
ஏண்டி நீயும் மணப்பாறையா

நீ கைகால் முளைச்ச மத்தளமா
உன்னை வாசிக்கப் பின்னால் சுத்தனுமா
நீ ஆர்மோனிய கட்டையமா
என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா

நான் வாலிபம் திருடும் வீணையடா
இங்கே வந்தா ஒளியும் பூணையடா
நான் வயதுக்கு வந்த வயலினடா
என்னை மைனரைப் போல வாசியடா

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண் மீன் கூட்டம் மொய்கின்றதே


என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே ....
என் காட்டு பாதையில் நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே


உன் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூ பூக்கும்
உன் காலடி தீண்டிய வார்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும்

உன் தெரு பாத்தாலே என் கண்கள் அலை மோதும்
உன் வாசல் தேடி போகச் சொல்லி கெஞ்சுது என் பாதம்..

என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள் ...
உன்னாலே என் வீட்டின் சுவறேல்லாம் ஜன்னல்கள்..

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும் மொச்சத்தினை சேரும் ..

அனுமதி கேட்காமல் உன் கண்கள் என்னை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்

உன் கைகள் கோக்காமல் பயணங்கள் கிடையாது ...
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது..

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண் மீன் கூட்டம் மொய்கின்றதே

என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே ....
என் காட்டு பாதையில் நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

அத்திரி பத்திரி கத்திரிக்கா

அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
என் படிப்ப நான் தொலைச்சேன்
என் மனச நான் தொலைச்சேன்
கணக்கு புக் தொறந்தா
உன் காதல் முகம் தோணும்
காம்பஸ் போல தானே
என் கண்ணு உன்ன சுத்தும்
என் மாமா மகன் நீங்க
என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?

பரீட்சை எழுதும் நேரம்
உன் சிரிப்பு தானே - நெனச்சாலே
பிள்ளையார் சுழிய நெனச்சி
உன் பேரை தானே - வரைஞ்சாலே

ஸ்ரீ ராமஜெயம் எனக்கு எனக்கு உன்
பேர்தான் பேர்தான் இனிமேலே
கிளிபிள்ளையாய் தினமும் தினமும்
அதை சொல்வேன் சொல்வேன் தன்னாலே


திருக்குறளாய் திருக்குறளாய் உந்தன்
குரல்தான் உனக்கு உனக்கு
தலைநகரம் தலை நகரம் உந்தன்
தெருதான் உனக்கு உனக்கு
உயிரே உயிரே .....
என் மாமா மகன் நீங்க என்
அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ

ஒருநாள் ஒருநாள் ஒருநாள் ஓரு
காதல் பூதம் - புடிச்சிருச்சு
மறுநாள் மறுநாள் மறுநாள் அது
உன்பேர் சொல்லி - கடிச்சிருச்சு
உதடுகளை உணவாய் உணவாய்
அது கேட்கும் கேட்கும் தினம்தோறும்

ஊருசனம் உறங்கிய பின்னே அது
முழிச்சி மெதக்கும் கதவோரம்
குலசாமி திருநீறு வெச்சு பார்த்தேன்
அது நீ இல்ல
குத்தாலம் கோவிலில் தாலி கட்ட
சொல்லிச்சு நில்லு
உயிரே உயிரே ......

என் மாமா மகன் நீங்க என்
அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ


அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
என் படிப்ப நான் தொலைச்சேன்
என் மனச நான் தொலைச்சேன்
கணக்கு புக் தொறந்தா
உன் காதல் முகம் தோணும்
காம்பஸ் போல தானே
என் கண்ணு உன்ன சுத்தும்
என் மாமா மகன் நீங்க
என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ

சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால

சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாவணி நழுவுது கீழே தன்னால

சக்க போடு போட்டாளே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால


கொண்டையிலே பூவடுக்கி
கும்முனுதான் பேசுற
கெண்ட காலை நீவுற
கிச்சு கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு புடிக்க வெக்கிற
அஞ்சு நொடி நேரத்தில .. கோடி முறை பார்க்குறே
மீனுகுஞ்சு போல துள்ளி ஐய்சாலக்கடி காட்டுற

எச்சி தொட்டு கச்சிதமா உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம் வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்

கொழுத்து போன பொம்பளை இடுப்ப கொண்டாடீ
ஹே .. கொஞ்சம் நானும் ஓடினா தவிப்ப திண்டாடி

சக்க போடு போட்டாளே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
ஹே ..தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால


உள்ளங்களை சேர்த்து வெச்சு ஊருக்காக வாழுற ..
பம்பரமா ஓடுற ..
உன்னை எண்ணி ஏங்கிரேனே என்ன செய்ய போகுற
உள்ளங்கையில் தூக்கி வெச்சு உத்து உத்து பார்க்கவா
உருட்டி கீழ தள்ளி ஒண்டிக்கு ஒண்டி ஆடவா

ஒத்த சொல்லு சொன்னதில பத்திகிச்சு என் மனசு
மத்தபடி கன்னத்துல முத்த கதை நீ எழுது

வடிச்ச சோறு போலதான் ஆவி பரகுற ..
ஹே மடிச்ச சேலை கலைக்க தான் கூவி அழைக்கிறேன்
சக்க போடு போட்டனே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால

தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால

நீ கோவப்பட்டால் நானும் கோவ பாடுவேன்

நீ கோவப்பட்டால் நானும் கோவ பாடுவேன்
நீ பார்க்க விட்டால் நானும் பார்க்க மாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசா விட்டால் நானும் பேச மாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
Baby i love you
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன்
Baby i love you



நீ பேசும் வார்த்தை கவிதை விரும்ப மாட்டேன்
நீ பேரழகி என்று பொய்யை சொல்ல மாட்டேன்
நீ குளிக்கும்போது ஏத்தி ஏத்தி பார்க்கமாட்டேன்
நீ எச்சில் செய்த எதயும் நான் கேக்கமாட்டேன்
நீ ஒப்பனைகள் செய்யும் முன்பு பார்க்கமாட்டேன்
நீ கனவில் வந்தால் கூட கண்ணால் காண மாட்டேன்
என் சுற்றும் பூமி நீ தான் என்று சுத்தமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
Baby i love you
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன்
Baby i love you


உன் உன் கண்ணா குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சு குழியில் மீசை முடி நட்டு வைப்பேன்
உன்னை உப்பு மூட்டை கட்டி கொண்டு தூங்க வைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில் அலார்ம் வைப்பேன்
அட sunday கூட காதலுக்கு வேலை வைப்பேன்
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்
என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
Baby i love you
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன்
Baby i love you

ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா

ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா
திரு ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா
என் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா
ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா
ரசிகா ரசிகா என் ரசிகா ரசிகா பெண் ரசிகா
நெஞ்சை வசியம் செய்து போன ரசிகா

இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும்
அதன் மணம் இனிக்கும்
இவள் நின்று நிமிர்ந்ததும் வானில் விழா
அது வானவில்லா ? இல்லை வசந்த வில்லா ?

அந்த எகிப்தின் மும்ம்யும் இமை திறக்கும்
இவள் கொஞ்சம் சிரித்தாள் அது உயிர் பிழைக்கும்
நிலமேங்கே நிலமேங்கே
இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே
ஊஞ்சல் ஆடுதே ஆடுதே
இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே

இவள் காதோரம் மாநாடு பூக்கள் கூட்டம் போடுதே
எட்டி பிடிக்க கட்டி இருக்க மின்னல்
வடமும் பிடித்து வலை வீசுதே .


அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஓர் வார்த்தை தான்
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே
அந்த ஆதாமின் உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே
கடும் விஷம் கூட கரும்பாக சுவைக்கின்றதே
அது சோகத்தை சொபின்றி துவைக்கின்றதே


உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
மழை தூறல்கள் தேடல்கள் மண்ணை தொடும்
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்
விரல் கொண்டாடும் தேடல்கள் இசையை தரும் ,
விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும்
தேடல் விடியல் தரும்

Monday, October 4, 2010

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்

ஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா
ஹே ஹே ஹோ ஹோ ல்லா லா லா
ஓ ஓ ஓ ஓ ஓ

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான் தான் அதன் ராகம் தாளம் கேட்டேன்
தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர்விட்டு ஊர் சென்று காவியம் பாட..

பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே...

(பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்)

பந்தங்கள் யாவும் தொடர்கதைப்போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளாய்
நூழிலைப் போல் இங்கு பாலுடன்
நெய்யென கலந்திடும் நாள்..

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்ததுதிங்கே
மண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திகழ்த்திட

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நான் தான் அதன் ராகம் தாளம் கேட்டேன்
தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.

பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்...
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்.

ஆடல் கலையே தேவன் தந்தது

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது......

மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
மல்லிகையே வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்

வண்ண வண்ண மேலாடை ஆஆஆ
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்.
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்.

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
தேவன் தந்தது தேவன் தந்தது

சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண்பறிக்கும் மின் கொடியோ,
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண்பறிக்கும் மின் கொடியோ,

விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெந்நிற நிலா
பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா..
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ

தலைசிறந்த கலைவிளங்க நடம்
புரியும் பதுமையோ - புதுமையோ
சதங்கைகள் தழுவிய பதங்களில்
பலவித ஜதி ஸ்வரம் வருமோ!!

குரல் வழி வரும் அனிமொழி ஒரு சரச பாஷையோ
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!!!
ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ரி
க ம ம தக திமி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ப தா
நி ரி ஸா கா மா கா ரி க ரி ஸ ம ரி தா
நி ரி ச நி தா ப ஸா நி த ப

தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது...
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது.... தேவன் தந்தது....

பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா...

பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்.
தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை
கண்ணில் வெந்நீரை வார்த்தேன்.

கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் நெய்யாக வந்தாய்

இந்தக் கண்ணீரில் சோகமில்லை
இன்று ஆனந்தம் தந்தாய்.
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்.
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே...
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே..

உன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன்மானைப் பார்த்துக்கொண்டே
சென்று நான் சேரவேண்டும்.

மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..
பூவே பூச்சூடவா.. எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா...

எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

படம்: பூவே பூச்சூடவா.

இசை: இளையராஜா

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ஆ ஆ ஆ ஆ..

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.

தத்தத்தோம் தரிகிடதோம் தளாங்குதோம்.
தகதிமிதோம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்.

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்... ஆஆ...

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்... ஆஆ...


பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே.. கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே..

மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி
மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி

கண்பாரயோ.. வந்து சேராயோ.. கண்ணம்மா.

யாவுமே சுக முனிபோல் ஈசனாம் எனக்கும் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா,

கண்ணம்மா கண்ணம்மா

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.

அலைபாயுதே கண்ணா.

அலைபாயுதே கண்ணா....
அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே கண்ணா


அலைபாயுதே....

வேணு கானமதில் அலைபாயுதே
என் மனம் மிக அலைபாயுதே
மோகன வேணு கானமதில் அலைபாயுதே

கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே...
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே.....


கண்ணா......கண்ணா..


நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று


நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதர
நேரமாவதறியாமலே மிக வினோதமானமுரளீதர



என் மனம் அலை பாயுதே.
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே.....

கண்ணா......கண்ணா..



தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே

உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே


கனிந்த உன் வேணுகானம் ..ஆஅ...ஆஅ..
கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே

கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா
கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா


ஒரு தனித்த வனத்தில் அணைத்து
எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா

கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ


இது தகுகோ.. இது முறையோ..
இது தருமம் தானோ....

குழல் ஊதிடும் பொழுது ஆடிடும் குழல்கள் போலவே
மனது வேதனை மிகவூது

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக
அலைபாயுதே.
உன் ஆனந்த மோகன வேணுகாணமதில்
அலைபாயுதே.

கண்ணா.. கண்ணா.. கண்ணா...

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை

(சின்ன)

மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை
கார்குழலில் உலகைக் கட்டிவிட ஆசை

(சின்ன)

சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

(சின்ன)

செந்தாழம் பூவில்...

படம் - முள்ளும் மலரும்
இசை - இளையராஜா
பாடியவர் - கே.ஜே.ஜேசுதாஸ்


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

(செந்தாழம் பூவில்...)

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

(செந்தாழம் பூவில்...)

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்கசிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

(செந்தாழம் பூவில்...)

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வெளியே
கரையில் கரைந்து இருக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி (2)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டும் கூடுதடி

(காதல் வந்தால் ...)

உயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு
Babe, Tell me you love me
It's never late, Don't hesitate
சாவை அழைத்து கடிதம் கேட்டேன் காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு
உன்னால் தான் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நில குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி ...

(காதல் வந்தால் ...)

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு
அனை தந்தாய் கண்டதி ல்லை நான் கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை
நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
வளர் பிரையாவதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி ...

(காதல் வந்தால் ...)

எனைக் காணவில்லையே நேற்றோடு

ஓ..அன்பே..அன்பே!
எனைக் காணவில்லையே நேற்றோடு..
எங்கும் தேடித் பார்க்கிறேன், காற்றோடு..
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு?? ...அன்பே!
நான் நிழலில்லாதவன் தெரியாதா?
என் நிழலும் நீயெனப் புரியாதா?
உடல் நிழலைச் சேரவே முடியாதா? அன்பே..அன்பே!
நடை போடும் பூங்காற்றே..பூங்காற்றே!
வா,வா..என் வாசல்தான்..
வந்தால் வாழ்வேனே நான்! (எனைக் காணவில்லையே..)

ஆதாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்..அன்பே உன் பேரைச் சொல்லித்தான்!
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும்..கண்ணே நம் கண்கள் சந்தித்தால்!
நானென்று சொன்னாலே நானல்ல,நீதான்!
நீயின்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீதான்...
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்...அன்பே! (எனைக் காணவில்லையே..)

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் - நீ என்னை நீங்கிச் சென்றாலே!
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் - நீ எந்தன் பக்கம் நின்றாலே!
நீயாக நீயென்னை விரும்பாத போதும்..
பொய்யொன்று சொல் கண்ணே...என் ஜீவன் வாழும்!
நிஜம் உந்தன் காதல் என்றால்! (எனைக் காணவில்லையே..)