Sunday, April 26, 2015

அதிசய ராகம்

அதிசய ராகம்
ஆனந்த ராகம்
அழகிய ராகம்
அபூர்வ ராகம்
(அதிசய...)


வசந்த காலத்தில்
மழை தரும் மேகம் - அந்த
மழை நீர் அருந்த
மனதினில் மோகம்

இசை எனும் அமுதினில்
அவளொரு பாகம் (2)
இந்திர லோகத்துச்
சக்கரவாகம்
(அதிசய...)


பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்

தேவர்கள் வளர்த்திடும்
காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால்
அது என் யோகம் (2)

ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால்
காவிரி மாதவி

முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொளி
முழுவதும் பார்த்தால்
அவளொரு பைரவி
அவளொரு பைரவி
அவளொரு பைரவி

கண்ணனுக்கு என்ன வேண்டும்

கண்ணனுக்கு என்ன வேண்டும்
கண்ணனுக்கு என்ன வேண்டும்
தினமும் உதிக்கும் பொன்மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல்மலரோ
உன்னை எண்ணி ஏங்கித் தவிக்கும்
உள்ளம் என்னும் மலரோ
சொல்லு கண்ணா... சொல்லு கண்ணா... சொல்லு கண்ணா...
(கண்ணனுக்கு...)


நதி வழி ஓர் ஓடம் போவது போலே
விதி வழி என் உள்ளம் உன் புகழ் பாடும்
தூரிகைகள் தீட்டாத ஓவியம் நீயே
பாரில் உனைப் பாடாத காலங்கள் வீணே
உன்னைப் போற்ற மண்ணின் மீது
உள்ளம் உண்டு கோடி கோடி (2)
உந்தன் உள்ளம் என்னவென்று சொல்லு கண்ணா...
(கண்ணனுக்கு...)


அல்லும் பகல் தோறும் உன் ஸ்ரீகிருஷ்ண கானம்
உள்ளமதில் உருகாமல் போனால் என்னாகும் (2)
வெண்ணிலவில் நதியோரம் வேங்குழல் ஓசை
என்னையது தாலாட்ட ஏங்குது ஆசை
கீதகோவிந்த கிருஷண கிருஷணா
நாத வேதங்கள் கிருஷண கிருஷணா
பாதவிந்தங்கள் போற்றி கிருஷ்ணா
யாதுமாய் நின்ற கிருஷ்ணா
(கண்ணனுக்கு...)

அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்

அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரைக் கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால் என் இமை ரெண்டும்
கைகள் தட்டுதே...
(அடடா அடடா...)


நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்த போது
எந்தன் கருப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி

என் வீட்டுப் பூவெல்லாம்
உன் வீட்டுத் திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம்
எங்கென கேட்குதடி
(அடடா அடடா...)


ஏய் வானம் மீது போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் மயங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி

உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான் சேர்க்கும்
ஞாபகச் சின்னங்கள்
(அடடா அடடா...)

பூ வாசம் புறப்படும் பெண்ணே

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!

உயிர் அல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்?
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி!


புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஒரு வானம் வரைய நீலம் வண்ணம்
நம் காதல் வரை என்ன வண்ணம்?

உன் வெட்கத்தை விரல்தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா

(பூ வாசம்...)


ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?
உற்று பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது?
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது

நீ வரைய தெரிந்த ஒரு நவீன கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கவிஞன்
மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல
மடியோடு விழுந்தாயே
வா வா............
(பூ வாசம்...)

அன்னக்கிளி நீ வாடி

அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க
மஞ்ச மயிலே உன் தோகையில் ஒளிஞ்சு
கண்ணாமூச்சி நான் ஆட
கொஞ்சி விளையாடி கும்மாளம் போட்டு
என்னை உனக்குள்ளே தேட

அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க
நெல்லுக்கு பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க


விழியில் விழியில் தங்க ஜரிகை களை பின்னும்
அழகில் அழகில் ஒரு நிமிஷம்
மனதில் மனதில் அடி பம்பரங்கள் ஆடும்
சரியும் உடையில் ஒரு நிமிஷம்
மல்லிகைச் சரமே பக்கம் கொஞ்சம் வாடி
மூச்சாலே உன்னை நான் முழம் போட
அழகே உன்னை தரணும் நீ ஒரு நிமிஷம்


குலுங்கும் குலுங்கும் உன் வளையல்களாய் இருந்து
சிணுங்க வேணும் ஒரு நிமிஷம்
வளையம் நெளியும் குட்டி குறும்புகளை பண்ணும்
இடையில் வேணும் ஒரு நிமிஷம்
முத்தாடும் கடலே விட்டுத் தர வேணும்
மீனாகி உன்னை நான் அள்ளிக் குடிக்க
அழகே நீ உன்னை தரணும் ஒரு நிமிஷம்
(அன்னக்கிளி நீ வாடி...)

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன் 
என் கண்ணில் ஒரு தீ வந்தது 
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் 
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது 
காதல் என உயிரும் சொன்னதன்பே 
காதல் என உயிரும் சொன்னதன்பே

என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால வந்தது அந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே

சரணம் ௧

சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்
என்னை நீ மாற்றினாய்
எங்கும் நிறம் பூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம் 
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது 
அதன் பேர் என்னவென கேட்டேன் 
என் கண்ணில் ஒரு தீ வந்தது 
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்

சரணம் ௨
உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை 
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை 
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை 
காதலில் கரைவதும் ஒரு சுகம் 
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா 
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது 
அதன் பேர் என்னவென கேட்டேன் 
என்கண்ணில் ஒரு தீ வந்தது 
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன் 
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே 
காதல் இது உயிரும் சொன்னது அன்பே

ஓ மஹ ஜீயா

ஓ முஹலை ஓ முஹலை

ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீய
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
(ஓ மஹ..)

ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ
ரஹதுல்லா சோனாலி
(ஓ மஹ..)
ஹா ஹா ஹோஹோ
ஹா ஹா..

சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
( மஹ..)

ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
( ஹோ மஹ..)