Monday, March 10, 2014

ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்

ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்

ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்

ரோஜா ரோஜா
ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும்
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும்

ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்

மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி
நீ தெருவில் நடந்து போனா எனக்கு செய்தி தலைப்பு செய்தி
மத்தவங்க சிரிப்ப பாத்தா ஒகே வரும் ஒகே
நீ சிரிச்சு பேசும் போது எனக்கு வந்துதிடுதே சாக்கே
மத்தவங்க அழகு எல்லாம் மொத்தல போரு போரு
சிங்காரி உன் அழகு தானே போதை ஏத்தும் பீரு பீரூ
கிங்கு பிஷர் பீரு

ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்

மத்தவங்க உரசி போனா ஜாலி செம ஜாலி
நீ உரசி போனா பிறகு பாத்தா காலி ஐ ஆம் காலி
மத்தவங்க கடந்து போனா தூசி வெரும் தூசி
நீ கடந்து போனா பிறகு குளிரு ஏசி விண்டோ ஏசி
மத்தவங்க கண்ணுக்கெல்லாம் சிமாட்டி நீ சேட்டை சேட்டை
என்னுடைய கண்ணுக்கு நீ எப்போவுமே காதல் கோட்டை
நிப்பாட்டுறேன் பாட்ட

ஊதா ஊதா
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்

ஊதா ஊதா
ஊதா 

எனக்கென பிறந்தவ

எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்
ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சேன்
ஆசை மாமன் இவன் தானே பாட்டு படிச்சா

யம்மாடியோஓஓஓஒ..
ஓஒ ஓஓ ஓஓ ஓஓ

உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

மாஞ்சிட்டு மேடை போட்டு
மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா

ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்டு
அணல் மூச்சு வாங்கினாள்

பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ
இன்னும் என்னாச்சு

உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெட்கம் உண்டாச்சு

மயங்காதே மாலை மாத்த
நாளும் வந்தாச்சு

உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

நீ சூட்டும் பூவுக்காக
நெடுந்தூரம் வாடுது
நீ வைத்த பொட்டுக்காக
மடிமொத்தம் வாடுது

ஆத்தாடி உன்னைத்தானே
கண்ணாடி தேடுது
காவேரி எங்கே போகும்
கடலென்று கூறுது

அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட

மையல் விடுநீ மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட

அடங்காது ஆசைகூட
நானும் போராட

உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

ஹ ஹஹ ஹாஆஆ

ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சான்
ஆசை மாமன் தூங்காம தானே பாட்டு படிச்சான்

யம்மாடியோஓஓஓஒ..
ஆஆ..ஆஆ..ஆஆ.

எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்

மழை நின்ற பின்பும் தூறல் போல

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கும் பெருமை கிட்டுமா
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தாய் மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே அது மறுபடி இரண்டென பிரிந்திடுமோ

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்

கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னறுகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இரண்டும் கைகள் கோர்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவில் வந்து விடு நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கும் பெருமை கிட்டுமா
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா...

கெழக்கு சிவக்கையிலே…

கெழக்கு சிவக்கையிலே…
கெழக்கு சிவக்கையிலே…
கீர அறுக்கையிலே – நான்
கீர அறுக்கையிலே
அந்த கரும்பு கடிக்கையிலே
அந்த கரும்பு கடிக்கையிலே
நான் பழசை நெனைக்கையிலே
பல் அருவா பட்டுருச்சே…

சபாஷ் கோனாரே..

கெழக்கு சிவக்கையிலே
கீர அறுக்கையிலே
அந்த கரும்பு கடிக்கையிலே
நான் பழசை நெனைக்கையிலே

பல் அருவா பட்டுருச்சே…

மீச வெட்டருவா
என் ஆசை சுட்டுருமா
உன் வேசம் கலைஞ்சிருமா
நான் நேசம் நினைக்கையிலே
நெஞ்சுருகி போயிருச்சே…

நெஞ்சுருகி போயிருச்சே…

மனசு ஆறலையே
என் கோபம் தீரலையே
நம் வாழ்வும் மாறலையே
உன் முகத்தைப் பார்க்கையிலே
என் துன்பம் பறந்துருச்சே…

ராசா மாறிடணும்
என் பாசம் புரிஞ்சக்கணும்
புது பாதை பார்த்துக்கணும்
நல்ல திசையில் நடக்கையிலே
எதிர்காலம் பொறந்திடுமே…

எதிர்காலம் பொறந்திடுமே…

வாழ்க்கை நாடகமா
என் பொறப்பு பொய் கணக்கா
தெனந்தோறும் வெறுங்கனவா
என் விதிய எழுதையிலே
அந்த சாமியும் உறங்கியதே…

அய்யா கலங்காதே
சூரியன் ஒடையாதே
ஊர் வஞ்சம் நெலைக்காதே
நீ உளநாள் மட்டும்தான்
இந்த உசுரும் போகாதே…

இந்த உசுரும் போகாதே…

நீ வருவாய் என நான் இருந்தேன்

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
(நீ வருவாய்..)

கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை
வாராயோ..
(நீ வருவாய்..)

அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
(அதிதேவி..)
இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்றும்
(இரவெங்கே..)
அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு
வாராயோ..

(நீ வருவாய்..)

ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
(ஒரு மேடை..)
குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
(குழல் மேகம்..)
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மரியில் ஒரு புதிய கவிதை சொல்ல
வாராயோ..
(நீ வருவாய்..)

படம்: சுஜாதா
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: கல்யாணி மேனன்

சின்னஞ்சிறு வயதில்

சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்

ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தளம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

படம்: மீண்டும் கோகிலா.
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.பி. ஷைலஜா
இசை: இளையராஜா.
வரிகள்: கண்ணதாசன்.

உனக்கென்ன மேலே நின்றாய்

தகதகதினதத ததம்தோம்....
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ  நந்தலாலா(2)
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்
நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
தகினதத ததம்தோம்

ஆடாத மேடை  இல்லை போடாத வேஷம் இல்லை(2)
சிந்தாத கண்ணீர்  இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)
பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா (உனக்கென்ன மேலே )


படம் : சிம்லா ஸ்பெஷல்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

சங்கீத ஜாதி முல்லை

நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம்
நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம்
என் நாதமே வா..

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா
(சங்கீத..)

திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாக
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொல்லாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி..
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ..

ராஜ தீபமே எந்த வாசலில் வாராயோ
குயிலே குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே..

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு 
அவள் நீதானே நீதானே
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் 
நீதானே நீதானே நீதானே
விழி இல்லை என்னும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
(விழி இலலை..)

நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டே
கண்டு கொண்டும் இந்த வேதம் என்ன
ராஜ தீபமே..

படம்: காதல் ஓவியம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

வரிகள்: வைரமுத்து

முழுமதி அவளது முகமாகும்

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை.. கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அனிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

படம் : ஜோதா அக்பர்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும்.. வருவேன்
ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

Sunday, March 9, 2014

ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

செம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது
தங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள்
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
என் ஆலயம் பொன் கோபுரம்
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனேம்மா
தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனேம்மா
மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வெளியே
கரையில் கரைந்து இருக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டும் கூடுதடி
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்

உயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு
Babe, Tell me you love me
It's never late, Don't hesitate
சாவை அழைத்து கடிதம் கேட்டேன் காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு
உன்னால் தான் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நில குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்
என் கண்ணீர்

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதி ல்லை நான் கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை
நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு

சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு..
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு..
தன்னன்னானன...தன்னன்னானன..தன்னன்னானன...தன்னன்னானன..
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..ஆ..ஆ..ஆ....

தூங்காத காற்றே துணை தேடி ஓடி
என்சார்பில் எந்தன் காதல் சொல்வாயா
நில்லாத காற்று சொல்லாது தோழி
நீயாக உந்தன் காதல் சொல்வாயா
உள்ளே எண்ணம் அரும்பானதா
உன்னால் இன்று ருதுவானவ
நானதை சோதிக்கும் நாள் வந்தது..
தன்னன்னானன...தன்னன்னானன..தன்னன்னானன...தன்னன்னானன..

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்
உன் ஸ்வாச வாசம் வீசும் பூவெல்லாம்
நீ வந்து போனால் என் வீடு எங்கும்
உன் கொலுசின் ஓசை கேட்ட்கும் நாளெல்லாம்
கனா வந்தால் மெய் சொல்கிறாய்
கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்
போவென்னும் வார்த்தையால் வா எங்கிறாய்
தன்னன்னானன...தன்னன்னானன..
தன்னன்னானன...தன்னன்னானன..

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்


தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி

தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி

அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் 

லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்

லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதலை
அதை உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன் கொடுக்க முடியலை
கானா கத்துக்க வந்தேன் நானு உங்க வீட்டுல
பெட்ரோல் இல்லாத காராட்டம் நின்னேன் ரோட்டுல
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன் இன்னும் எழுதலை
அதை உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன் கொடுக்க முடியலை
உன் சித்தி டார்ச்சரை நான் தாங்கி
உன் சித்தப்பன் கிட்ட அடிவாங்கி
லவ் பண்ணேன் உன்னைத்தான்....
உன் தம்பி வந்தான் எமனாட்டம்
தினமும் எனக்கு போராட்டம்
கிழிஞ்சு போச்சு என் பெல்பாட்டம்...
துரத்தி துரத்தி காதலிச்சேன் வெறிப்புடிச்ச நாயாட்டம்
எகிறி குதிச்சு ஓடுறியே வண்டலூரு மானாட்டம்...
நான் அப்பாடக்கரு
இந்தா வாங்கிக்கோ லெட்டரு...
அன்ன நடை போடாதே
என்னை ஆட்டி படைக்காதே
என் வைஃபா வந்திடு
ஆசையை மூடி மறைக்காத
உங்க அப்பன் பேச்சை மதிக்காதே
ஐ லவ் யூ சொல்லிடு
விளம்பரத்தை பார்த்துவிட்டு
விழுந்துடாதே ஆத்துக்குள்ள
நடனமாடி காட்டிடுவான்
மாட்டிக்காத சேத்துக்குள்ள
அவன் சைனா மேடும்மா
இவன் பக்கா ஃபிராடும்மா...

அவன் சைனா மேடும்மா
இவன் பக்கா ஃபிராடும்மா...