Friday, July 24, 2009

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னாளுமே என் பாட்டுக்கு நீ முதல்வரி...
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளில்தைக்காதே..
அரபுநாடே அசந்து நிற்க்கும் அழகியா நீ..-
உருது கவிஞன் உமர்கையாவின் கவிதயாய் கே கே...


ஏய்.. உன்னுடய நெற்றி உன்னை பற்றி கூருதே....
உள்ளிருக்கும் குட்டு உன்தன் பொட்டு சொல்லுதே...
என்னுடய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ...
என்க்கு இருக்கும் சக்தி பறவசக்தி புரிஞ்சிக்கோ...
கால் கொலுசுதான் கல கலக்குது.....
கையின் வளயல் காதுக்குள்ளே கானம் பாட........
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..

போட்டிருக்கும் ரோச வேசம் பேச பொருந்துதே...
பெண்ணழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே....
வெண்ணிலவில் வேகம் ஓடும் மேகம் விலகுமா
வண்ண உடல்யாவும் காணும் யேகம் வாய்க்குமா
கொஞ்ஜம் பொய்கள் கொஞ்ஜம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி...

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..

என்னவோ என்னவோ என்வசம் நானில்லை

என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன்சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன்சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ...
ப்ரியமானவனே.
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை

மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா?
குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா?
விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா?
நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா?
விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா?
இடைவேளை வேண்டுமென்று இடம் கேக்கும் சம்மதமா?
நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா?
என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா?

என்னவோ என்னவோ

இமையாக நானிருப்பேன் சம்மதமா சம்மதமா?
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா?
கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா?
கண்மூடி தவமிருப்பேன் சம்மதமா சம்மதமா?
ஓ.. ஒருகோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா?
பலகோடி பௌர்னமிகள் பார்த்திடுமே சம்மதமா?
பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா?
ப்ரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா?

பறவையே எங்கு இருக்கிறாய் பறக்கவே என்னை அழைக்கிறாய்

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே
அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் கைகள் சொல்வதுண்டோ
நீ போட்டாய் கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே


உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மெளனங்கள் போதும்
இந்தப் புல் பூண்டும் பறவையின் நாமும் போதாதா
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா

முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே ....
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே.....

ஏழை காதல் மலைகள்தனில்
தோன்றுகின்ற ஒரு நதியாகும்
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ
இதோ இதோ இந்தப் பயணத்திலே
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா

முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே....
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே.....

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்க கணி
பொன்னின் மனி சின்ன சின்ன
கண்ணின் மனி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கன்ன் மெனி
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மெனி
முதங்கல் தந்திடும் இந்த பூ மெனி
கன்படும் கன்படும் இந்த பொன் மெனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
ஆஹாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைது
ஆசை தான் தீராமலே உன்னை தந்தான் அம்ம
கன்னே உன்மெல் மெகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தலட்டும்
நடக்கும் நடயும் ஒரு பல்லக்கு சிரிக்கும் சிரிப்பும் ஒரு
மதப்பு
உனது அழகுகென்ன ரஜதி உலகம் நடந்து வரும்
கைதட்டி
வராமல் வந்த டெவதை
உலாவும் இந்த வெல்லி தாரகை
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி ஞலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்க கனி
பொன்னின் மனி சின்ன சின்ன
கன்னின் மனி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கன்ன் மெனி
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மெனி
முதங்கல் தந்திடும் இந்த பூ மெனி
கன்படும் கன்படும் இந்த பொன் மெனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

நன்றி சொல்ல உனக்கு

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும்
காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்
நெடுங்காலம் நான்
புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும்
என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்


செவ்விளநி நான் குடிக்க
சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல
எந்தன் உயிர்தான்
கள்ளிருக்கும் தாமரைய
கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிர்தான்
இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல
உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான்
எனக்கு வேற வேலை இல்ல

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட
பிறகு ஏம்மாகலங்குரா ?

வங்கக் கடல் ஆழமென்ன
வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும்
கண்டதில்லையே!?
என்னுடைய நாயகனே
ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு
அந்த வானம் எல்லையே!
எனக்கென வந்த தேவதையே
சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும்
நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென
ராம்ன் கொண்ட சீதையேன
மடி சேர்ந்த பூரதமே
மனதில் வீசும் மாருதமே

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட
பிறகு ஏம்மாகலங்குரா ?
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தால நீ கிடைச்சே
திருக்கோவில் வீடுயென்று
வெளக்கேத்த நீயும்வந்த
நேரில் வந்த ஆண்டவனே,..

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இதம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கடல் நானே
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே

(புது வெள்ளை)

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ வெடுக்கென்று மலரும்
நீ பருகாத போதிலே உயிர்ப் பூ சருகாக உலரும்
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது

(புது வெள்ளை)

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூகேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
மலர் மஞ்சம் காணாத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ

ஒண்ணுமே புரியலே உலகத்திலே

ஒண்ணுமே புரியலே உலகத்திலே
ஒண்ணுமே புரியலே உலகத்திலே
என்னன்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியலே உலகத்திலே

கண்ணிலே கண்டதும் கனவாய் போனது
காதிலே கேட்டதும் கதியாய் ஆனது
கண்ணிலே கண்டதும் கனவாய் போனது
காதிலே கேட்டதும் கதியாய் ஆனது
என்னான்னு தெரியலே சொன்னாலும் விளங்கலே
என்னான்னு தெரியலே சொன்னாலும் விளங்கலே
என்னை போலே ஏமாளி எவனும் இல்லே
ஒண்ணுமே புரியலே உலகத்திலே

கண்ணான தந்தையை கண்ணீரிலே தள்ளினேன்
கண்ணான தந்தையை கண்ணீரிலே தள்ளினேன்
கண்ணாடி வளையலை பொன்னாக எண்ணினேன்
பெண்ணாசை வெறியிலே தன்மானம் தெரியலே
பெண்ணாசை வெறியிலே தன்மானம் தெரியலே
என்னை போல ஏமாளி எவனும் இல்லே…
ஒண்ணுமே புரியலே உலகத்திலே…

Wednesday, July 15, 2009

நெஞ்சினிலே நெஞ்சினிலே

நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே ஹோய்
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ முந்திரி முத்தொளி சிந்திக்கோ
பஞ்சொளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்கனிலாவே

தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே ஹோய்
தங்கக் கொலுசல்லே கொலுங் குயிலல்லே மாரன மயிலல்லே

நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
நெஞ்சிலே...ஊஞ்சலே...

ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
ஓரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே
வான்னிலா நாணுமே முகிலிழுத்துக் கண் மூடுமே

(நெஞ்சினிலே)

ஹேய்க் குருவாரிக் கிளியே குருவாரிக்கிளியே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
குக்குரு குருகுரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே

(தங்கக்)

குங்குமம் ஏன் சூடினேன் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாந்தேடத்தான்

(நெஞ்சினிலே)

எந்தன் குரல் கேட்டு உன்னை தூக்கம் தழுவாதா

படம்: கோகுலத்தில் சீதை
பாடல்: எந்தன் குரல் கேட்டு

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே நண்பனே நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே நண்பனே நண்பனே...

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா

ல ல லா ல ல லா........

இரவென்றும் பகலென்றும்
உனக்கில்லையே...
இளங்காலை பொன்மாலை
உனக்கில்லையே....
மது வென்னும் தவறுக்கு
ஆளாகிறாய்....
அதற்காக நியாயங்கள்
நீ தேடுகிறாய்
ஆயிரம் பூக்களில்
ஆனந்தம் காண்கிறாய்
நிறங்களே வேற்றுமை
நினைத்திடு நண்பனனே....
மது கிண்ணம் தலை எடுத்து
பெண்ணை விலைக்கொடுத்து
நீ மூடுவாய்.....

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா

ல ல லா ல ல லா........

வரவின்றி செலவானால்
தவறில்லையே
வாழ்நாட்கள் செலவானால்
வரவில்லையே
நேற்றோடும் இன்றோடும்
நீயில்லையே
நாளை உன் கையோடு
உனக்கில்லையே
யாரிடம் தவறு இல்லை
யாரிடம் குறை இல்லை
தூக்கமே நிம்மதி
தூங்கிடு நண்பனே.....
நீ கடந்த காலங்களை
களைந்து எறிந்துவிடு
விழி மூடுவேன்........

எந்தன் குரல் கேட்டு
உன்னை தூக்கம் தழுவாதா
பந்தம் நானில்லை
பரிதாபம் கூடாதா
நண்பனே.. நண்பனே ...நண்பனே...
இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா
உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா
இதை யாரிடம் சொல்வேன்
நண்பனே... நண்பனே... நண்பனே...

ம்...ம்...ம்...ம்...ம்...ம்......

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

படம் : அயன்


விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா
மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா
மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணைக் கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

கடலாய்ப் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய்த் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்தக் காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே

ஒ ..ஒ ..ஒ ..

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா
மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனை நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றிப் பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னைப் பிடிக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

ஏய் வா வா வா என் தலைவா

படம்: சச்சின்
பாடல்: ஏய் வா வா வா என் தலைவா

சனுக்கு சனுக்கு சின் சின் சச்சின்
சனுக்கு சனுக்கு சின் சின் சச்சின்

ஏய் வா வா வா என் தலைவா
நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும்
என் தலைவன் நீயல்லவா

வா வா வா என் தலைவா
நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும்
என் தலைவன் நீயல்லவா
ஏய் ஒரு தடவை ஜெயிப்பதெல்லாம் சரித்திரமாகாது
ஓஹோ...
தினசரி நீ ஜெயித்துவிடு திசை கண்டு முன்னோடு
அடி தனியாக படையாக ஏறு ஏறு ஏறு முன்னேறு

ஏய் மாரோ மாரோ கொல்லி மாரோ
யாரோ யாரோ சன்யாரோ
ஏய் மாரோ மாரோ கொல்லி மாரோ
அட யாரோ யாரோ சன்யாரோ

வா வா வா என் தலைவா
நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும்
என் தலைவன் நீயல்லவா

சனுக்கு சனுக்கு சின் சின் சச்சின்
சனுக்கு சனுக்கு சின் சின் சச்சின்

ஏய் ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்
புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்
உன்னை என்னைப் போல் வாழ்ந்தால் போதும்
உலகம் ரொம்ப அழகு
ஏய் கடவுளாகவும் வேண்டாம்
மிருகம் ஆகவும் வேண்டாம்
ரசிகனாய் இரு ஒவ்வொரு நாளும்
ரசனையோடு பழகு
ஏய் விடியலுக்கு விண்வெளிதான் விளம்பரம் செய்யாது
ஓ...ஓஒ....
ஏய் விருதுகளை விலை கொடுத்து வாங்கிடக் கூடாது
ஓ...ஓஒ....
ஏது முடியாது என கிடையாது
மோதி மோதி மோதி போராடு

ஏய் மாரோ மாரோ கொல்லி மாரோ
யாரோ யாரோ சன்யாரோ
ஏய் மாரோ மாரோ கொல்லி மாரோ
அட யாரோ யாரோ சன்யாரோ

ஏய் வா வா வா என் தலைவா
நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும்
என் தலைவன் நீயல்லவா

சனுக்கு சனுக்கு சின் சின் சச்சின்
சனுக்கு சனுக்கு சின் சின் சச்சின்
சனுக்கு சனுக்கு சின் சின் சச்சின்
சனுக்கு சனுக்கு சின் சின் சச்சின்

வாழ்க்கை
இந்த வாழ்க்கை
இதை கவிதை புத்தகம் போல் நேசி
அதை கடைசி பக்கம் வரை வாசி
ஏய் உலகம்
அடடா இந்த உலகம்
இந்த நிமிடம் நிமிடமாய் சந்தோஷி
மனம் நிறைய நிறைய உல்லாசி
ஏய் தங்க மழை பெய்தாலே
துணைக்கொரு குடை வாங்கு
ஓ...ஓ......
அட தடைகளுக்கு அஞ்சாதே
உழைத்திட முடியாது
ஓ...ஒ.....
கூட நின்றால் தான் சுட்டால் தான்
மூங்கில் கூட பாடும் குழல் ஆகும்

ஏய் மாரோ மாரோ கொல்லி மாரோ
யாரோ யாரோ சன்யாரோ
ஏய் மாரோ மாரோ கொல்லி மாரோ
அட யாரோ யாரோ சன்யாரோ

Tuesday, July 14, 2009

காதல் யோகி காதல் யோகி

காதல் என்னும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும்
காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும்
போதை தந்து தெளிய செய்துஹ்
ஞானம் தருவது காதல் தான்

காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்

நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன்
ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
(நான் காதல்..)
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்

நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை தொலைத்து விட்டாய்
அந்த மதுவுக்கு மனசை தொலைத்து விட்டாய்
ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
ஏ காதல் யோகி

இவன் யோகி ஆனது ஏனோ
இவன் யோகி ஆனது ஏனோ
அதை இன்று உறைத்திடவானோ
இல்லை நின்று விழுங்கிவிடுவானோ
ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே
மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே
நான் வானத்தில் ஏறிய நேரத்திலே
கிளி வண்ணம் மறைந்தது மேகத்திலே
நான் வானம் என்ற ஒன்றில் இன்று
காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே
ஏ காதல் யோகி

காதலில் சொந்தங்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன்
ஓ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்
மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
ஓ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லை
அவை தொலைந்தால் உயிர் எனக்கு இல்லை
நான் காதல் மட்டும் பற்றி கொண்டு
கானும் உலகம் விட்ட யோகி ஆனேனே
ஏ காதல் யோகி

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை

படம் : அன்னை
பாடியவர் : சந்திரபாபு


புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்

Monday, July 13, 2009

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு

போடி போடி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு லாங் ட்ரைவ் போலா கம் வித் மீ
ஸ்லோவா ஸ்பீடா நீயே ஓட்டிப்பாரு

போடி போடி

ஓட்ட சிம்கார்ட்டே எம்டி ஐப்போட்டே
உன்ன ஸ்வ்ட்ச் ஆன் செய்யுறது வேஸ்டு
ஹட்ச்சு புல் டாக்கே நச்சு கீழ்ப்பாக்கி
என்ன சுத்தமா போனா நான் சேஃப்

மண்ரோடே டேய் மண்ரோடே
எப்ப ஆவ மேயின் ரோடே..

போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ

ஹே Excuse me
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
உன் பேச்சும் தோட்டும் ரொம்ம குப்பலெட்சுமி
போடி போடி

ஹேய் கந்தசாமி என் லைஃபுல புயலா வந்த சாமி
என் அழகைப் பார்த்து மனசுல நொந்தசாமி
சீ வெந்தசாமி தூ ஹ ஹ ஹ..

உன் அழகுனால இல்ல
உன் இம்சையால நொந்தசாமி
உன் கையில சிக்கமாட்டா இந்த சாமி
கடவுள் இல்லைன்னு சொன்னான் இராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றான் கந்தசாமி

நோப்பா நோப்பா நோப்பா
சொன்னார் வள்ளுவர் கிரேட்ப்பா
கடல் தாண்டிக் கூடச்சொன்னார் கடைசி குரளில்
வேணாம் வேணாம் வேணாம்
நீ நாமம் போட வேணாம்
உன் கூட வந்தா சண்டைப்போட்டே வாழ்க்கைப்போகும் வீணா

ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே
காதல் ஒன்னும் யூதர் இல்லக் கொல்லாதே
லிங்கன் பேரனே லிங்கன் பேரனே
தத்துவங்கள் பேசிப்பேசிக் கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்
தீராது டிஷ்யூம் தான்

போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா

ஹேய் என்ன ரொம்ப ஓவரா பண்ற
ஒன்னும் பண்ண விட மாட்றியே
நீ படிச்சப் பொண்ணுதானே
உன்ன படிக்க முடியலையே
ஹே ஏ ஏ தள்ளிப்போ
என்னை தள்ளிட்டு போ
கொஞ்சம் கூடு
ரொம்ப மூடு
ஐயோ

வேணா வேணா வேணா வேஸ்டுப்பேச்சு வேணாம்
இப்ப விட்டாத்தப்பு நீ பின்னால் அழுவ தானா
ஹேய் போடி போடி போடி ஃபூலா போன லேடி
கெர்ள்ஸை நம்பி லூசாப்போன பாய்ஸ் பல கோடி
ஹே உப்பு மூட்டையே உப்பு மூட்டையே
லைஃப்புல்லா உன்னை தூக்கி சுமப்பேண்டா
ஓ டக்கு முட்டையே டக்கு முட்டையே
வாத்துக்கூட்டம் கூட உன்ன சேத்துக்காது
பேசாதே நீ கிராஃமாறி
ப்ளீஸ் வாயேன் டேக்மாறி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை

படம் : ஏப்ரல் மாதத்தில்

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள
யார் இடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல ?
திட்டம் இட்டே நாம் செய்த குற்றம் என்ன ?
போராட காலம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே நீ நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

உன் தேவை நான் என்றும் தாங்கி கொள்ள
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல ?
என் உள்ளம் தடுமாறுதே
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும் வரும் சொர்கமே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

அந்தி நேரத் தென்றல் காற்று...

அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தா...லாட்டு
அந்தி நேரத் தென்றல் காற்று
அள்ளித் தந்தத் தாலாட்டு

தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்க மகன் வரவைக் கேட்டுத்
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உயிர் கொடுத்தத் தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே?

தாலாட்ட அன்னை உண்டு!
சீராட்டத் தந்தை உண்டு!
இன்ப துன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு!

ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் உண்டு!
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு!

- அந்தி நேரத் தென்றல் காற்று...

உன் மகனைத் தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
அன்பு கொள்ள நானும் உண்டு!

தத்துப் பிள்ளை இவனைக் கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்!
பத்துத் திங்கள் முடிந்த பின்னே
முத்துப் பிள்ளை அவனைக் காண்பேன்!

உறங்காத விழியில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்!
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்!

அந்தி நேரத் தென்றல் காற்று...

செந்தமிழ்த் தேன்மொழியாள்

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே...
நின்றது போல் நின்றாள் நெடுதூரம் பறந்தாள்
நிற்குமோ நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே...

செந்தமிழ்த் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
[நிலாவென...]
பைங்கனி இதழ்களில் பழரசம் தருவாள்
பருகிட தலைகுனிவாள்

காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ...
[காற்றினில்...]
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ?
[அவள் செந்தமிழ்த்...]

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கே பெண்ணே
பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ..
[செந்தமிழ்த்...]

யாருக்கு மாப்பிள்ளை யாரோ

படம்: பார்த்தால் பசி தீரும்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா

யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்காரோ
எந்தப் பார்வை பட்டு
சொந்த உள்ளம் கெட்டு
எங்கே மயங்கி நின்றாரோ
(யாருக்கு..)

கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கைகலந்து காதல் புரிவாரோ
தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
(யாருக்கு..)

ஊர் அறிய மாலையிடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
சீர் வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
(யாருக்கு..)

டாடி மம்மி வீட்டில் இல்லை

படம்: வில்லு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: திவ்யா


டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஹேய் மைதானம் தேவை இல்லை
Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா
ஏய்… கேளேண்டா மாமூ… இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு
(டாடி மம்மி…)

Taxi-காரன் தான் நான் ஏறும்போதெல்லாம்
அட meter-க்கு மேல தந்து பல்லிளிச்சானே
Bus-லேறித்தான் ஒரு seat கேட்டேனே
தன் seat-ஐ driver தந்து விட்டு ஓரம் நின்னானே

ஏ…அளவான உடம்புக்காரி…அளவில்லா கொழுப்புக்காரி…
அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி
இருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி
(டாடி மம்மி..)

வைர வியாபாரி என் பல்லை பார்த்தானே
தான் விற்கும் வைரம் போலி என்று தூக்கிப்போட்டானே
தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே

ஏய்…அழகான சின்ன பாப்பு…ஆ..வைக்காதே எனக்கு ஆப்பு…
அழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு
கொப்பும் கொலையா இருக்கும் உனக்கு நான் தாண்டி மாப்பு…
(டாடி மம்மி…)

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா

(உருகுதே மருகுதே )


அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு
ஏழுகடல் தாண்டித்தான் ஏழுமலை தாண்டித்தான்
எங்கருத்த மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பார்க்கிறேன்
காட்சி யாவும் நிசமா மாற கூட்டிப் போகிறேன்
சாமி பார்த்து கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்க


(உருகுதே மருகுதே)


ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன்
கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கச் சொல்லி கேட்கிறேன்
கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னை சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா
மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன்

(உருகுதே மருகுதே)

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
இன்னாளும் என்னாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

படம்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

காதோடுதான் நான் பாடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்...

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடுதான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

தோல்வி நிலையென நினைத்தால்

படம்: ஊமை விழிகள்
பாடல்: தோல்வி நிலையென நினைத்தால்


தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உண்ர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...