Tuesday, April 12, 2011

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

என்னை தேடி காதல்
என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடும் முன்
செய்தி அனுப்பு …ஹோ
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லிஅனுப்பு ..ஹோ
பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பதுபோலே
நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து
இரவை கொல்கிறேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்திஅனுப்பு …ஹோ

யாரோ உண் காதலில் வாழ்வது யாரோ
உண் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுகள் நீள்வதுஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
கிளையை போல் என் இதயம் தவறிவிழுதே

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்திஅனுப்பு …ஹோ
பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்
மரங்கள்கூட நடப்பதுபோலே
நினைத்து கொள்கிறேன்

முதன் முதலில் பார்த்தேன்

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே

நந்தவனம் இதோ இங்கேதான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்

முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே

உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கு போனது பாரடி உன்னில்
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்
என் சுவாசக் காற்றில் எல்லாம்
உன் ஞாபகம்.. உன் ஞாபகம்

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

தவமின்றி கிடைத்த வரமே

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியில் தானே நான்

நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் வான்முகில்
நீ நடந்திடும் பாதையாகிரேன்

நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே ஒ ...

இனி வாழ்வில் எல்லாம் சுகமே

ஒ கடிவாளம் illaatha காற்றாக நாம் மாற
வேண்டாமா ? வேண்டாமா ?

கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா ? வேண்டாமா ?

கை கோர்க்கும் போதெல்லாம்
கை ரேகை தேயட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை
முடிவின்றி போகட்டும்

பகலெல்லாம் இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன

நம் உயிர் ரெண்டும்
உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

சூடான இடம் வேண்டும்
சுகமாகவும் வேண்டும்
தருவாயா ? தருவாயா ?

கண் என்ற போர்வைக்குள்
கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா ? வருவாயா ?

விழுந்தாழும் உன் கண்ணில்
கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில்
நினைவாக நான் எழுவேன்

மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன்

இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியில் தானே நான் வாழ்கிறேன்

நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன் நான் வான்முக்தில்
நீ நடந்திடும் பாதையாகிரேன்

நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே

இனி வாழ்வில் எல்லாம் சுகமே

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே

யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஓ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள் நெஞ்சை கிழிக்கிறாள் ஓ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த..)
என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால் தீண்டும் கொலுசில் என்னோட மனசை
சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த..)
நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிப்பாள் நான் பார்த்தால் மறைப்பாள்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்
பெண் நெஞ்சம் புதிததை போல எப்போதும்
யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிப்பதே இல்லை
மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த..)

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி... உன் தோளிலே...
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

தேவை யாவும் ஹே ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி

மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை

இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை
இல்லாமல் வேலன் ஏதடி...

ஆ......ஆ......ஆஆஆஆ

அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
சேதி சொல்லடி... என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....

அந்தி மழை பொழிகிறது

அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
இந்திரன் தோட்டத்து முந்திரியே!
மன்மத நாட்டுக்கு மந்திரியே!
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!

ஆ......... ஆ......... ஆ......... ஆ.........

தேனில் வண்டு மூழ்கும்போது,.... ஆ.........
தேனில் வண்டு மூழ்கும்போது,
பாவம் என்று வந்தாள் மாது!
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்!
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்!

தனிமையிலே, வெறுமையிலே,
எத்தனை நாளடி இள மயிலே?
கெட்டன இரவுகள்! சுட்டன கனவுகள்!
இமைகளும் சுமையடி இளமையிலே!
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!

தேகம் யாவும் தீயின் தாகம்!
தாகம் தீர நீ தான் மேகம்!
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது!

நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு,
தாவணி விசிறிகள் வீசுகிறேன்!
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்!

அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
சிப்பியில் தப்பிய நித்திலமே,
ரகசிய ராத்திரி புத்தகமே!
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!

அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா

ஏன்னா, நீங்க சமத்தா? இல்ல அசடா?
சமத்தா இருந்தாக் கொடுப்பேளாம்,
அசடா இருந்தா மறுப்பேளாம்,

ஏண்டி, புதுசாக் கேக்குறே என்னப் பாத்து

அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?

அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவைய வாங்கிக்கறா பட்டுப் பொடவைய வாங்கிக்கறா

அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்குறாண்டி - பட்டு

உங்களுக்குத்தான் வாழ்க்கைப்பட்டு
என்னத்தைக் கண்டா பட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
நாளுங்கிழமையும் போட்டுக்க ஒரு
நகை நட்டுண்டா நேக்கு
எட்டுக்கல்லு பேசரிபோட்டா
எடுப்பா இருக்கும் மூக்கு
சட்டியிலிருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு
எப்போ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு
ஹுக்கும்

ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு
பேசினா என்ன வெப்பேளோ ஒரு குட்டு
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு

என்னத்த செய்வேள் - ஹாங்
சொன்னதச் செய்வேன்
வேறென்ன செய்வேள் -
அடக்கி வப்பேன்
அதுக்கும் மேலே -
ஆங் பல்ல உடப்பேன்

அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா

அட பாஸு பாஸு பாஸு

அட பாஸு பாஸு பாஸு
என் பேரை கேளு பாஸு
அட பாஸு பாஸு பாஸு
என் பேரே தாண்டா பாஸு
(அட பாஸு..)
அட வேலை வெட்டி இல்லை
ரொம்ப பிஸியான புள்ளை
க்ரிக்கேட் ஆடும் போது
அந்த கோபுரம்தான் எல்லை
நான் நல்லவனா கெட்டவனா
யாரும் கேட்டதில்லை
(அட பாஸு..)

காலையில அஞ்சு மணி
நாங்க கண்ணு முழிப்போம்
பாலம் மேல ஏறி நின்னு
காவிரியில் குளிப்போம்
எட்டு முதல் பத்து வரை
பஸ் ஸ்டாப்பில் சிரிப்போம்
மத்தியானம் வரைக்கும் நாங்க
சலூனில கெடப்போம்
தள்ளு வண்டி கடையில
கடன் சொல்லி லஞ்சுடா
எங்களோட ஆபிஸ் எல்லாம்
டீக்கடை பெஞ்சுடா
(அட பாஸு..)

நாலு முதல் அஞ்சு வரை
காலேஜில் கெடப்போம்
வால் எல்லாம் சுருட்டிட்டு
நல்லவனா நடிப்போம்
ஆறு மணி மேல நாங்க
தியேட்டருல கூடுவோம்
அப்புறமா வந்து நாங்க
குவாட்டர் எங்கே தேடுவோம்
(அட பாஸு..)

ஆறு மனமே ஆறு

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு…

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி…
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு…

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்….
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் – பெரும்
பணிவு என்பது பண்பாகும் – இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு…

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு….

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மன்னிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

ஆசைப் பட்ட எல்லாத்தையும்

ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்றாலும்
தாய் போல தாங்க முடியுமா

ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்றாலும்
தாய் போல தாங்க முடியுமா

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா


ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும் லாலாலா.....லாலாலா.....லாலாலா.....லாலாலா.....

பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்தே பசி மறப்பா
இளவட்டம் ஆன பின்பும்
எண்ணை தேய்ச்சு குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வரை
உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா
நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவ பிடிக்க வைப்பா
பிஞ்சு விரல் நகம் கடிப்பா
பிள்ளை எச்சில் சோறு தின்பா
பல்லு முளைக்க நெல்லுமுனைய
மெல்ல மெல்ல தான் கீறி விடுவா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா


ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா

மண்ணில் ஒரு செடி முளைச்சால்
மண்ணுக்கு அது பிரவசம் தான்
உன்னைப் பெற துடி துடிச்சால்
அன்னைக்கு அது பூகம்பம் தான்
சூரியனைச் சுற்றிக் கொண்டே
தன்னை சுற்றும் பூமியம்மா
பெற்றெடுத்த பிள்ளையச் சுத்தி
பித்துக் கொள்ளும் தாய்மையம்மா
கர்ப்பத்தில் நெழிந்த உன்னை
நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பேதை போல் அவள் இருப்பா
மேதையாய் உன்னை வளர்ப்பா
என்ன வேண்டும் இனி உனக்கு
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு :)
இனி உனக்கு அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா

ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்னை
தேடி வந்து நின்றாலும்
தாய் போல தாங்க முடியுமா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா

ஆராரிரோ....ஆராரிரோ.....ஆராரிரோ....ஆராரிரோ...ஆராரிர ோ

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் உன்னாலே
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
நேந்திரம பழமே நெய்மேனி நதியே
மிளகு கொடியே நான்
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்

சகியே உன்னிடம் ஆ...
சகியே உன்னிடம் செம்பருத்தி பூ நிறம்
சகியே உன்னிடம் செம்பருத்தி பூ நிறம்
சாலையில் நீ நடந்தால் விபத்துக்கள் ஆயிரம்
உன்னை காணவே நிலவும் தோன்ட்ரிடும்
ஆ...உன்னை கானவே நிலவும் தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் ஹெய் ர தட் ர தட் ஆ ர

காதல் கதக்களி
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்

ஆராரிராரோ நான் இங்கு பாட

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே..
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கு சொன்னது...
அதை நான் அறிவேனே!!
அம்மா என்னும் மந்திரமே ..
அகிலம் யாவும் ஆள்கிறதே

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாய்..
ஊரு கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
.. நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்பபுக்கும் இடையில்
வழி நடத்தி சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி ..
நானே.... தாயாய் மாறிட வேண்டும்

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
.. நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேல் ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில் செலவாகும்
வரவும் நீ......
சுழலுகின்ற பூமியில் மேலே சுழறாத
பூமி நீ.........
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற........

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

Friday, April 1, 2011

உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி

உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி

உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி

பெத்தெடுத்தவ யாரு
அழகு பேருவச்சது யாரு
தத்தெடுத்தது யாரு
இப்போ தத்தளிப்பது யாரு
(உள்ளுக்குள்ள..)

அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா
அவளும் சொல்லவில்லையென்றால் தப்பாகத்தான் போகுமடா
அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா
அவளும் சொல்லவில்லையென்றால் தப்பாகத்தான் போகுமடா

எல்லோரும் இங்கே மயக்கத்திலே
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே
எல்லோரும் இங்கே மயக்கத்திலே
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே
ஒரு பொழுது அது விடியாதா
அட போடா உலகம் கெடக்குது கெடக்குது
(உள்ளுக்குள்ள..)

பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி
உண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பை தொட்டி
பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி
உண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பை தொட்டி

என் தாயும் அன்று பச்சை இலை
நான் இன்று இங்கே எச்சில் இல்லை
என் தாயும் அன்று பச்சை இலை
நான் இன்று இங்கே எச்சில் இல்லை
புயலாச்சு பெரும் மழையாச்சு
இந்த விளக்கு அதிலும் எறியுது எறியுது
(உள்ளுக்குள்ள..)

அம்மாக்களே ஓ அப்பாக்களே

படம்: இனிது இனிது
பாடல்: அம்மாக்களே ஓ அப்பாக்களே
இசை: மிக்கி ஜே மேயர்
பாடியவர்கள்: மிக்கி ஜே மேயர், கிருஷ்ணா சைத்னே, ஆதித்யா, கார்த்திக்
வரிகள்: வைரமுத்து

அம்மாக்களே ஓ அப்பாக்களே
சொந்தங்கள் இப்போ சுட்டுங்களேன்
எங்களைப் புரிந்துக்கொள்ளுங்கள்
உங்கள் உலகம் தத்தம் புதுசு
எங்கள் உலகம் புத்தம் புதுசு
இனிமேல் எங்கள் தேசியப்பறவை
ஆக்கிரோச்சியன்கள் அறிவுப் பறவை
செல்போன் எண்கள் காதல் காதலி
இணையம் இணையம் எங்கள் இதயம்
அன்று நமது பாரத நாடு
அமெரிக்காவை கடன் கேட்கும்
இன்று எங்கள் அறிவைப்பார்த்து
அமெரிக்காவே கடன் கேட்கும்
அன்று நமது பாரத நாடு
அமெரிக்காவை கடன் கேட்கும்
இன்று எங்கள் அறிவைப்பார்த்து
அமெரிக்காவே கடன் கேட்கும்

உங்கள் போட்டி உள்ளூருப்போட்டி
எங்கள் போட்டி உலகப்போட்டி
எல்லையில் இல்லை தில்லையில் இல்லை
டெல்லியில் இல்லை திருச்சியில் இல்லை
மதுரைக்காட்டும் மாணவனுக்கும்
மாஸ்க்கோ மாணவன் போட்டி
லாலாப்பேட்டை மாணவனுக்குக்
லண்டன் மாணவன் போட்டி
சிகாலப்பட்டி மாணவனுக்கு
சிட்னி மாணவன் போட்டி
வாடிப்பட்டி மாணவனுக்கு
வாஷிங்டன்னில் போட்டி
எட்டுத்திசையய் எங்கள் பக்கம் திரும்பி
வைக்கும் திருவணிகம்
இண்டர்னேஷனல் சந்தையில் இன்று
இந்திய மூளைக்கு விலை அதிகம்
சில்மிஷம் ஒன்றில் கல் விஷம் இல்லை
ஸ்பரிசம் உண்டு நேசம் இல்லை
தகவல் உண்டு தாண்டுதல் இல்லை
போட்டிகள் உண்டு பொறாமை இல்லை
(அன்று..)

எங்களின் பக்கம் கல்பனா சாவ்லா
எங்களின் அண்ணி சுனிதா வில்லியம்
சுனிதா வில்லியம்

செயற்கைக்கோல் சுற்றும் உலகின் ஆண்களும்
எல்லாம் ஆக்கம் ஆச்சு
அன்றே வீடு தூரம் ஆச்சு
கண்ணால் பார்த்தால் கற்புப்போய்விடும் என்பது
உங்கள் உலகம்
கட்டியணைத்தும் கெடவில்லை என்பது
எங்கள் உலகம்
பகவான் பார்த்து ஞானம் கொடுப்பான் என்பது
உங்கள் உலகம்
பத்து நொடிகள் தியானம் வேணும் என்பது
எங்கள் உலகம்

கண்ணின் மணியே கண்ணின் மணியே

படம் : மனதில் உறுதி வேண்டும்
பாடல்: கண்ணின் மணியே கண்ணின் மணியே
பாடியவர் : சித்ரா
இசை : இளையராஜா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா

வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போதும் ஆளில்லை
சமநீதி சேர்க்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு காதல் அடிமைகளா
பொன் அள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமைக் கோலம்
எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய்யில்லை
கனவுகளில் மிதந்த படி கலங்குது மயங்குது பருவக்கொடி...

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா

ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா

படம் : ஆடுகளம்
இசை : ஜீ வி பிரகாஷ்
பாடல் வரிகள் :ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
பாடியது: வேல்முருகன்

ஹே ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணாலேஎன்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ளே ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சு என்ன கொன்னாடா
ஏ பொட்ட காட்டுலே ஆலங்கட்டி மழை பெய்ஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு
அட பட்டாம்பூச்சி தான் என் சட்டையில ஒட்டிக்கிச்சு
பட்டாசு போல நான் வெடிச்சேன்
முட்ட கண்ணால என் மூச்செடுத்து போனவ தான்
தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா

ஏ பவுடர் டப்பா தீர்ந்து போனதே
அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனதே
நான் குப்பற தான் படுத்து கிடந்தேன்
என்ன குதிர மேல ஏத்திவிட்டாயே
ஒன்னும் சொல்லாம உசிர தொட்டாயே
மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே

ஏ கட்ட வண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணழக பாத்து போங்கடா
அட கட்டு சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழக பாத்து போங்கடா
கத்தாழ பழச்சிவப்பு முத்தாத இளஞ்சிவப்பு
வத்தாத அவ இடுப்பு நான் கிறுக்கானேன்

அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன்
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாலே என்ன ஒருவாட்டி

அன்பே அன்பே கொல்லாதே

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே (அன்பே)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி (அன்பே)

கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்தக் கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்

மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் (அன்பே)