Sunday, May 29, 2011

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...
சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...
சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...
சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட...
கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...
உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...
பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...
காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...
ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...
லட்சம் மின்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..
காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்...
எந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்...
உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு....

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்... ஹோ..
நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்..

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு...
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு...

முத்தம் முத்தம் முத்தமா

முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்புகள் கொத்துமா
(முத்தம்..)

ஒற்றை முத்தத்தில் என் ஒற்றை முத்தத்தில்
உன் உச்சந்தலையில் பித்தம் ஏறி ஆடினாய்
அடைமழை மேகம் போலே ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அள்ளி தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்
இதழோடு இதமாகு முத்தம் கேட்டேன் பதமாகு
நீ தந்தாய் நீ தந்தாய் என் எலும்பெல்லாம் தூளாய் போகும்
(முத்தம்..)

மெல்லிய பெண்ணே இத்தனை சக்தி
எப்படி வந்தது உனக்கு
இருதயம் மேலே மூளை கீழே
பௌதிக மாற்றம் எனக்கு
சிந்திய முத்தம் அது சைவம்தாண்டா
இனி அசைவ முத்தம் இங்கு ஆரம்பம்தாண்டா
அடி உலகின் பசியெல்லாம் முழு உருவாய் வந்த பெண்ணே
உன் முத்தம் ஒரு மோகம் அதில் செத்தாலும் செத்து போவேன்
(முத்தம்..)

கோதும் அருவியில் வெட்டும் மின்னலில்
மின்சாரம்தான் இருக்கு
கொஞ்சும் முத்தம் சிந்தும் போதும்
கொஞ்சம் வால்டேஜ் இருக்கு
மின்சாரத்தால் அடி ஒரு முறை மரணம்
இந்த பெண்சாரத்தால் தினம் பல முறை மரணம்
ஒரு முத்தம் அது மரணம்
மறு முத்தம் அது ஜனனம்
இதழ் நான்கும் விழுகாமல்
சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா

ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்

ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் சா ப்ளீஸ் சார்
எங்கள் முகவரி கொஞ்சம் கொடுங்கள்

ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
எங்கள் கனவுக்கு கை கொடுங்கள்
எங்கள் விரல்கள் நிலவின் மீது
தாளம் போட நீளாதா
மின்னல் கம்பி நாங்கள் மீட்ட
இன்னிசை புயலாய் அடிக்காதா
மில்லிசை பாடிவரும் பறவைகள் நாங்கள்
நாங்கள் கூடுகின்ற வேடந்தாங்கள் நீங்கள்
பார்வை முள் எங்கள் மீது பதிகின்ற நேரம்
சுற்றி வரும் எங்கள் வாழ்க்கை இசை தட்டு ஆகும்

ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
ஐ சே ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் சார்

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
ஹையோ

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா
நீ முற்றும் அறிவியல் பித்தன்
ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன்
உன்னால் தீம் தோம் தோம்
தீம் தோம் தோம்
தீம் தோம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜாப் பூவில் ரத்தம்
தீம் தோம் தோம் மனதில் சித்தம்

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்சிஜன் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம்

ஆசையே வா வா
ஆயிரம் காதலை ஐந்தே
நொடியில் செய்வோம்
பெண்ணே வா வா வா

காதல்காரா...
நேசம் வளர்க்க ஒரு
நேரம் ஒதுக்கு எந்தன்
நெஞ்சம் வீங்கி விட்டதே

காதல்காரி...
உந்தன் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான்
உன் காந்தக்கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோன்றும் ஆசைச் சிந்தனை
அன்பே

சனா சனா ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

நீ நியூட்டன் நியூட்டனின் விதியா
உந்தன் நேசம் நேசம் எதிர்வினையா
நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

ஹோ பேபி ஹோ பேபி
செந்தேனில் வஸாபி
ஹோ பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

என் இதயம் இதுவரை துடித்ததில்லை

என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துகிறதே

என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே


கூட்டத்திலே நின்றாலும்
உன்னையே தேடுது கண்கள்
ஒற்றையாய் போனாலும்
உன்னுடன் நடக்குது கால்கள்
அச்சமே இல்லாத பேச்சிலே
மயங்குது நெஞ்சம்
மிச்சமே இல்லாமல் உன்னிடம்
வந்தேன் தஞ்சம்
தாவணி மோதியே சாயுதே தேரடி
ரெண்டடி நாலடி நூறடி
இழுத்தாய்

என் இதயம்
இதயம் இதயம்
இதயம் இதயம்
இதயம் இதயம்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே


உன்னிடம் எப்போதும் உரிமையாய்
பழகிட வேண்டும்
பழகிட வேண்டும்
வைரமே ஆனாலும்
தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இதுவரை என்நெஞ்சில்
இல்லவே இல்லை பயங்கள்
இரண்டு நாள் பார்த்தேனே
மிரட்டுதே உந்தன் குணங்கள்
இத்தனை நாட்களாய்
படுத்ததும் உறங்கினேன்
இரண்டு நாள் கனவிலே
உன்னைக் கண்டு விழித்தேன்

என் இதயம்

என் இதயம்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே

சக்தி கொடு சக்தி கொடு

நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெயித்து விட
சக்தி கொடு
(நம் நடை..)

வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரை ஏற்ற சக்தி கொடு
பள்ளத்தில் கிடப்பவரை மேடேத்த சக்தி கோடு
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு
வருமைக்கு பிறந்தவரை வாழ வைக்க சக்தி கொடு
எறிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
இறைவா இறைவா

முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத்த காலை நான் வைக்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
இறைவா இறைவா

தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
(நம் நடை..)

புத்தம் புது பூமி வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு

யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்

போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

ஏன் என்ற கேள்வி

ஏன் என்ற கேள்வி -இங்கு
கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் - கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை

பகுத்தறிவு பிறந்தததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே(2)
உரிமைகளைப் பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதினாலே (2)

ஓராயிரம் ஆண்டுகளாக ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே (ஓராயிரம்)
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே
(ஏன் என்ற கேள்வி)

நீரோடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழைக்காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும் (நீரோடைகள்)
நம் தோள்வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்

முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர் உழைப்பதினாலே
கடமைகளை புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே
(ஏன் என்ற கேள்வி )

Monday, May 9, 2011

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அன்னை
தூய உருப்பளிங்கு போல் வழ என்
உள்ளத்தினுள்ளே இருப்பவள் இங்கு
வாராது இடர்
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமல் பூந்தாமரை போற்கையும்
துடி இடையும்
அல்லும் பகலும் அனவரதம்
துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி

தானனா தானனன தன்னன்னானா
தான தான நானா தான நானா தன்னன்னானா

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம் எத்தனை
எத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

இது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்கைப்பாட்டு
கல்லூரிப்பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு

நாம் கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு
கட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு
தாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஓட்டும் பாட்டு
தமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாட்டு

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க

நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க

பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம் எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

ச சநிதப ப பமகரி கரிநி சம சப சநி பம கரிச
சக ரிக மநி பம கமப
பச நித மப
சம கரி நிச
கம பம ப
நி ச க ரி ச
ச ரி த ப
க ரி நி ச
ம ப நி
க ரி ச
ப நி க ம
ப ம க ரி ச நி த ப
ச ரி க ம ப த ப ச நி ச க ரி ம க ரி ச
க ரி ச நி ச நி த ப
ப ச நி த ப க க ரி
க ரி க ப ம த ப ச
க ரி ச நி த ரி ச நி த ப
க ரி க ம
ப த ம ச ச
ப த ம க க க
ச ம க ரி ரி
ச நி த ப ப ப
ச க ரி ச
க ரி நி ச ச ச
ம க ரி
ப நி ச நி ப
க ரி க ம ப

படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா
வரிகள்: வைரமுத்து

காதல் ரோஜாவே

காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!

தென்றல் என்னைத் தீண்டினால்,
சேலைத் தீண்டும் ஞாபகம்.
சின்னப் பூக்கள் பார்க்கையில்,
தேகம் பார்த்த ஞாபகம்.
வெள்ளி ஓடைப் பேசினால்,
சொன்ன வார்த்தை ஞாபகம்.
மேகம் இரண்டும் சேர்கையில்,
மோகம் கொண்ட ஞாபகம்.
வாயில்லாமல் போனால், வார்த்தை இல்லை பெண்ணே!
நீயில்லாமல் போனால், வாழ்க்கை இல்லை கண்ணே!
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!

காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!

வீசுகின்ற தென்றலே!
வேலை இல்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா!
பெண்மை இல்லை ஓய்ந்துப் போ!
பூ வளர்த்த தோட்டமே!
கூந்தல் இல்லை தீர்ந்துப் போ!
பூமி பார்க்கும் வானமே!
புள்ளியாகத் தேய்ந்துப் போ!
பாவை இல்லை பாவை, தேவை என்னத் தேவை?
ஜீவன் போன பின்னே, சேவை என்ன சேவை?
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!

காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!

படம்: ரோஜா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...

படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: MS விஸ்வநாதன், இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுரமணியம், S ஜானகி

கோலி குண்டு கண்ணு

கோலி குண்டு கண்ணு
கோவ பழ உதடு

பாலப் போல பல்லு
படிய வச்ச வகிடு

ஆளத் தின்னும் கன்னம்
அலடிகாத கையி

சோலத்தட்ட காலு
சொக்க வைக்கும் வாய்யி

தய்ளு தொட்ட உன்னை
தேடி வந்தேன் தாயி

ஏய்...நீ எதுக்குப் பொரந்தியோ
ஹெய்...உசிர வாங்கிர..சே

நீ எதுக்கு வளந்தியோ
ஏ..வயசத் 'தா'ங்குர

ஏய்..நான் உனக்கு பொறந்தவ்வ
ஏ..பாஞ்சி பதுங்குற வா..

நான் உனக்கு வளந்தவ
ஏய்..காஞ்சி வெதும்புற

கோலி குண்டு கண்ணு
கோவ பழ உதடு

பாலப் போல பல்லு
படிய வச்ச வகிடு

சரனம் - 1

சீரான ரோசாவே
சீம்பாலு சீசவ்-அய்
நெட்டி முறிப்பதும்
எட்டி இருப்பதும்
என்ன கணக்கு

தேனான ராசாவே
தேகாத கூசாவே
தொட்டுப் பறிப்பதும்
கட்டி அணைப்பதும்
செல்ல கிறுக்கு

வேப்பல கூட இப்ப
தித்திகுது தேனா
பாப்ப நீ பாதி கொடுத்தா
ஹெய்....

கய்கல சோரு தண்ணி
கய்ப்ப களி மாம
உன் பேச்சை யாரும் எடுத்தா

அருகம் புல்லு நா..
ஆடாக வேணுமா...

இலவம் பஞ்சு நா..
இடிபாடு தாங்குமா

நீ சாமியா? பூதம்மா?
ஒண்ணும் புரியல
ரெண்டும் புரியல ஏய்..

(துண்டு)பல்லவி:
ஏய்..நான் உனக்குப் பொறந்தவ
ஏ..பாஞ்சி பதுங்குற..சே..

நீ எதுக்கு வளந்தியோ
ஏ..வயசத் 'தா'ங்குர

கோலி குண்டு கண்ணு
கோவ பழ உதடு

பாலப் போல பல்லு
படிய வச்ச வகிடு


சரனம் - 2

பத்தாய நெல் போல
நினாயே முன்னால
வம்பு வலக்குது
வம்பு வள்லக்குது
அந்த சிரிப்பு

வெள்ளாவி கண்ணால
சுட்டாயே தன்னால
கொள்ளையடிக்குது
கொள்ளையடிக்குது
கள்ள நெருப்பு

கண்ணுல கொட்டிக்கிட்ட
சீயக்கையப் போல
ஐயோ நீ உறுத்தரியே

தண்ணில சிந்திவிட்ட
சீமையெண்ண போல
என்னை நீ ஒதுக்கரியே

கேணி சகடையா
எதுக்கென்ன உருட்டுர

மாசக் கடைசியா
ஏன் என்னை விரட்டுர

நீ வசதியா...
வறுமையா...

அங்கு குறையுது
இங்கு நிரையுது ஏன்?

பல்லவி:

ஏய்..நான் உனக்குப் பொறந்தவ
ஏ..பாஞ்சி பதுங்குற..சே..

சே..நீ எதுக்கு வளந்தியோ
ஏ..வயசத் 'தா'ங்குர

கோலி குண்டு கண்ணு
கோவ பழ உதடு

பாலப் போல பல்லு
படிய வச்ச வகிடு


ஆளத் தின்னும் கன்னம்
அலடிகாத கையி

சோலத்தட்ட காலு
சொக்க வைக்கும் வாய்யி

தய்ளு தொட்ட உன்னை
தேடி வந்தேன் தாயி

ஏய்...நீ எதுக்குப் பொரந்தியோ
ஹெய்...உசிர வாங்கிர..சே

நீ எதுக்கு வளந்தியோ
ஏ..வயசத் 'தா'ங்குர

ஏய்..நான் உனக்கு பொறந்தவ்வ
ஏ..பாஞ்சி பதுங்குற வா..

நான் உனக்கு வளந்தவ
ஏ..காஞ்சி வெதும்புற

முழுமதி அவளது முகமாகும்

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை.. கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அனிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

Monday, May 2, 2011

இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகா..... மஞ்ச செவப்பழகா....
கள்ளச் சிரிப்பழகா....
(வெறும் காத்து தாங்க வருது)

ம்..... மறக்க மனம் கூடுதில்லையே

...மறந்திடுவேனிகலே...

இஞ்சி இடுப்பழகி..... மஞ்ச செவப்பழகி....
கள்ளச் சிரிப்பழகி.... மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா....

தன்னந்தனித்திருக்க தத்தளிச்சி நான் இருக்க....
ஒன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையை
புன்ன வனத்தினிலே பேடக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்....
உன் கழுத்தில் மாலையிட
ஒன்னிரண்டு தோளை தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக் கிளி கையத் தொட சின்னச் சின்ன கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே....
உள்ளம் மட்டும் உன் வழியே நானே....

அடிக்கிற காத்த கேளு அசையிற நாத்த கேளு
நடக்கிற ஆத்த கேளு நீ தானா....

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா நியாயமாகாதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்


இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்..
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்
நியாயமா நியாயமாகாதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌளனமா மௌளனமா

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா

என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் நியாயமா நியாயமா
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் மௌனமா மௌனமா
என்ன சொல்லப் போகிறாய்

வா வா என் தேவதையே

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….


வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு நான் இடவா…


வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….


செல்வ மகள் அழுகை போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னைக்க தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெரிக்கின்ற மழலை போல ஒரு
மூன்னூறு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாய் அமுதம் சுறந்ததுமா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….


பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வ மகள் தூங்கயிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கண்டு நடந்த போது இவள்
மிசையில்லாத மகள் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….


வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா….
வான் மிதக்கும்… கண்களுக்கு….
மயில் இறகால் மையிடவா…
மார் உதைக்கும்… கால்களுக்கு…
மணி கொலுசு…. நான் இடவா…

ஒரு உண்மை சொன்னால் - நேசிப்பாயா?

ஒரு உண்மை சொன்னால் - நேசிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் - என்னை
மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா?

பெண்கள் மீது மையல் உண்டு - ஆனால்
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீ தானே....... என் மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதிகளை மெல்ல பெருக்கு
ஒரு சாதல்.......... இனி நமக்கேதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் - என்னை
மன்னிப்பாயா?

காதல் என்னை வருடும் போதும் - உன்
காமம் என்னை திருடும் போதும்
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை.

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சதிதின் மேல் - என்னை
மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உன் கண்ணில் நீர் வழிந்தால்

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி


உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி


உன்னை கரம் பிடித்தேன்


உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி


உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி


கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி


ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன


ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
முள்ளில் படுக்கையிட்டு
இமையை மூடவிடாதிருக்கும்
பிள்ளை குலமடியோ என்ன பேதைமை செய்ததடி


பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு


பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு


என் தேவையை யார் அறிவார்
என் தேவையை யார் அறிவார் உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும்


உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ


உன் கண்ணில் நீர் வழிந்தால்

உன் தலை முடி உதிர்வதைக் கூட

உன் தலை முடி உதிர்வதைக் கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதோ
உன்னை நான் கண்டு சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ


உன் தலை முடி உதிர்வதைக் கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்.....

உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்
உயிரின் மீது பட்டுத் தெறிக்கும்
கைகள் பற்றி கொண்டே பேசிக் கொள்ளும் நேரம் இனிக்கும்
எதிர் வரும் காற்று உன் பெயரை என் மேல்
தினமும் கிறுக்கி விட்டுப் போகும்
நெற்றிப் பொட்டுக்குள்ளே கொட்டி விட்டேன் என்னை முழுதும்

உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன்
காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்
கையில் பட்ட என்னை உன் இதயப் பையில் வைத்து
என்னைக் கொடுப்பேன்


உன் தலை முடி உதிர்வதைக் கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
நீயும் என்னை தினம் தேட வேண்டும் என்று
தொலைந்து போக கொஞ்சம் ஆசை
நான் அணைத்துத் தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே
மேய்ச்சல் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்
மேய்த்துக்கொள் என்னை முழுதும்
தொட்டில் இன்றி தூங்கும் என் மார்பில் முத்தம் தினமும்

உன்னைப் பற்றி ஏதும்(?) காதல் கொடி நானே
உன் கை எழுத்தைத் தாங்கும் காகிதமும் நானே
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே


உன் தலை முடி உதிர்வதைக் கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதோ
உன்னை நான் கண்டு சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ

சோலைப் புஷ்பங்களே

ஆஆஆஆஆ
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

ஓஓஓஓஓஓஓஓஓஓ....

கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா ?
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா ?
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நென்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா?
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா?

பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே

பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி..
காவலுக்கு நாதி இல்லையா
என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி...!

நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..

உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே..

தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக..
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி...
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி...!

கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர் தூவவா

மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..

கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக..
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே..!


கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி...!

உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னை கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே


உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே


உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே


ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னை பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களை கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்க சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே...
தன்னை தருவாயோ இல்லை கறைவாயோ


உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே


நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னை தொட துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னை பார்த்த பின்னும்
உன்னை சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீயிருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமய மலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே
தன்னை தருவாயோ இல்லை கறைவாயோ


உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னை கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

மனம் விரும்புதே உன்னை

மனம் விரும்புதே உன்னை... உன்னை
மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

மனம் விரும்புதே உன்னை... உன்னை
மனம் விரும்புதே

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...


நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா
மனம் விரும்புதே

மனம் விரும்புதே உன்னை... உன்னை

மனம் விரும்புதே உன்னை... உன்னை
மனம் விரும்புதே

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!


நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

மனம் விரும்புதே உன்னை... உன்னை

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த துறக்கத்தில் தான்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்


உன்னை கண்ட நாள் ஒலி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்


காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்


காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்

ஏ நெஞ்சே என் நெஞ்சே

படபட படவென அடிக்குது இதயம்
தடதட தடவென துடிக்குது இமைகள்
சலசல சலவென சுழலுது விழிகள்

அடுத்தது யாரோ அடுத்தது யாரோ
எடுப்பது யாரோ எடுப்பது யாரோ
எனதா உனதா
எனவே எனவே
தவிக்குது தவிக்குது தவிக்குது தவிக்குது


ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்


ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்
ஹே... ஹே... ஹே....
காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்
ம்.... ம்.... ம்....
ஈர்க்கும் அதன் விசையில் இன்று வீழ்ந்தேன் நான்

மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு
சில்லென்று மனதை தொடுதே

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்

என்னில் ஒரு மாற்றம்
எதிலும் தடுமாற்றம்
பார்வை பரிமாற்றம்
ஒரு ஆனந்த ஏக்கம்

கண்ணை விட்டு வெளியே
காணும் ஒரு கனவே
வருந்தி அழைத்தாலும்
இனி வாராது தூக்கம்

வெகு நேரம் பேசி பின்பு
விடை பெற்று போகும் நேரம்
நால் அடிகள் நடக்கும் கால்கள்
நடை மறந்து திரும்பும் ஏனோ

பேசாத நேரம் தானே
பெரிதாக தோன்றும் அன்பே
காலங்கள் தோற்கும் இங்கே

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்

நேற்று வரை கனவில்
நிலவு வரவில்லை
அடம் பிடிக்கும் நிலவை
இனி நான் என்று பார்ப்பேன்

காதல் வரும் போது
கனவுகளும் மாறும்
நீ விரும்பும் நிலவை
இனி தினம் தோறும் பார்ப்பாய்

யார் யாரோ எழுதி சென்ற
புரியாத கவிதை எல்லாம்
நான் கேட்டு ரசித்தேன் இன்று

நாம் பார்த்த மரமும் இலையும்
புது போர்வை போர்த்திக்கொண்டு
புது பார்வை பார்த்துக்கொண்டு
நம்மை பார்த்து சிரிகின்றதே

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்

ஒ... ஒ... ஒ....
காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்
ம்.... ம்.... ம்....
ஈர்க்கும் அதன் விசையில் இன்று வீழ்ந்தேன் நான்

மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு
சில்லென்று மனதை தொடுதே

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே


நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி


இதுவரை எங்கிருந்தாய்
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்


உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா
இன்னும் என்னை புரியலையா


நான் சிரித்து மகிழ்ந்து
சிலிர்க்கும் வரத்தை நீ கொடுத்தாய்
நான் நினைத்து நினைத்து
ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய்


எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்


உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே


என் அருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே


நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி


உன்னுடன் இருக்கையிலே
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா


உன்னுடன் நடக்கையிலே
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கின்றதே


நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்


நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி


உயிரே என் உயிரே என்னவோ நடக்கிறதே
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்கிறதே


ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே


எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி


நான் என்ற சொல் இனி வேண்டாம்

நீ என்பதே இனி நான் தான்

இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை

இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை

உயிரே வா ...

நாடகம் முடிந்த பின்னும்

நடிப்பின்னும் தொடர்வது என்ன

ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே

உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே

உயிரே வா ...


நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி


நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி


நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி


நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி


அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி


அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி


அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி


அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி


உயிரே வா ...

மேகங்கள் என்னைத் தொட்டுப்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே
அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன்
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்
என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடிப் போகாதே ஊமைப் பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு

மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை

கேளடி கண்மணி பாடகன்

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆஅ...
நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி

என்னாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல் தான்
இன்னாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான்
கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி

நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி

நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானாது

கால்போன பாதைகள் நான் போனபோது
கைசேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆஅ...
நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி

என்னை கொஞ்சம் மாற்றி

சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே

புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி பருகுதே

என்னை கொஞ்சம் மாற்றி...


என் நெஞ்சில் உன்னை ஊற்றி...
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே

ஒன்னே ஒன்னு சொல்லணும்.....
ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா?
நாணம் மாறி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா
யாரை நான் கேட்பேன்... நீ சொல்வாயா
யாரை நான் கேட்பேன்... நீயே சொல்வாயா

என்னை கொஞ்சம் மாற்றி...


என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே

வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு
ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை
இன்று மட்டும் கொஞ்சம் நின்று ஒரு பூவை கிள்ளி கொண்டு
சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை இல்லை

நீ கிள்ளும் பூக்களை... நான் சூடி கொள்ளவே
என் இன்றை எண்ணம் இன்றே வந்தாசே
ஆனாலும் நேரிலே... எப்போதும் போலவே
இயல்பாக பேசி போவது என்றாச்சே
என்னை கொஞ்சம் மாற்றி... என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
ஒரு சொல்லால் என்னை வீழ்த்தி செல்லாதே

சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே
புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி பருகுதே


என்னை இங்கே வர செய்தாய்
என்னனவோ பேச செய்தாய்
புன்னகைகள் பூக்க செய்தாய் இன்னும் என்ன
அருகினில் அமர்ந்து என்னை
உற்று உற்று பார்க்கும் உந்தன்
துரு துரு பார்வைக்கும் தான் அர்த்தம் என்ன? என்ன?

என் பார்வை புதுசு தான்
என் பேச்சும் புதுசு தான்
உன்னாலே நானும் மாறிபோனேனே
கூட்டத்தில் என்னை தான்
உன் கண்கள் தேடனும்


என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே


என்னை கொஞ்சம் மாற்றி...


என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே

ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா?
நாணம் மாறி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா
யாரை நான் கேட்பேன்... நீ சொல்வாயா
யாரை நான் கேட்பேன்... நீயே சொல்வாயா
நீயே சொல்வாயா நீயே சொல்வா...யா...
நீயே சொல்வாயா....

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது
நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது
தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது
நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது
தம்பி தங்க கம்பி

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போட ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாராயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது
நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது
தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது
நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது
தம்பி தங்க கம்பி

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தேரிலே ஊர்கோலம் தான்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது
நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது
தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது
நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது
தம்பி தங்க கம்பி

காதலின் தீபம் ஒன்று

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன, காதல் வாழ்க

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை

அன்பிலே வாழும் நெஞ்சில்....... ஆஆஆஆஆஆஆ
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல்லவா
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்

என்னை நான் தேடி தேடி
உன்னிடம் கண்டுக் கொண்டேன்

என்னை நான் தேடி தேடி
உன்னிடம் கண்டுக் கொண்டேன்

பொன்னிலே பூவை அள்ளும்
....... ஆஆஆஆஆஆஆ

பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையை பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன, காதல் வாழ்க

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

படம் : நீர்க்குமிழி
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை : வி.குமார்
இயற்றியவர் : 'உவமைக் கவிஞர்' சுரதா


ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா

பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு

பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்கச் செய்வேன் ஆரிரரோ
பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்கச் செய்வேன் ஆரிரரோ

அள்ளித் தந்த அன்னை சொல்லி தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ
அள்ளித் தந்த அன்னை சொல்லி தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ
கட்டித் தங்கம் என்று கன்னம் தட்டிக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிரரோ
..........பச்சை மரம் ...............

ஆசை கிளி அங்கே ஊமை கிளி இங்கே
தந்தை கிளி நெஞ்சில் அமைதி எங்கே
ஆசை கிளி அங்கே ஊமை கிளி இங்கே
தந்தை கிளி நெஞ்சில் அமைதி எங்கே
அன்னை என்ற தெய்வம் தந்து சென்ற செல்வம்
உன்னை எண்ணி வாழும் கலங்காதே(2)
...........பச்சை மரம்...............

வாழ்வே மாயம்

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா…
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது?

(வாழ்வே)

யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது

(வாழ்வே)

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலைஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்
கருவோடு வந்தது தெருவோடு போவது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது