Saturday, February 6, 2010

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா

ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகன் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா ..

(நூறாண்டுக்கு )

பெண் : கண்ணாளனே கண்ணாளனே உன் கண்ணிலே என்னை கண்டேன்
ஆண் : கண்மூடினால் கண்மூடினால் அந்நேரமும் உன்னை கண்டேன்
பெண் : ஒரு விரல் என்னை தொடுகையில் உயிர் நிறைகிறேன் அழகா
ஆண் : மறு விரல் வந்து தொடுகையில் விட்டு விலகுதல் அழகா
பெண் : உயிர் கொண்டு வாழ்கின்ற நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா ..

(நூறாண்டுக்கு)

ஆண் : இதே சுகம் இதே சுகம் என்னாளுமே கண்டால் என்ன
பெண் : இன்னேரமே இன்னேரமே என் ஜீவனும் போனால் என்ன
ஆண் : ம்ம் .. முத்தத்திலே பல வகை உண்டு இன்று சொல்லட்டுமா கணக்கு
பெண் : இப்படியே என்னை கட்டிக்கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு
ஆண் : அச்சப்பட வேண்டாம் பெண்மையே எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே

(நூறாண்டுக்கு)

2 comments: