Monday, September 6, 2010

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை

திரைப்படம்: படித்தால் மட்டும் போதுமா?
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ்

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரச் சின்னம் அலைபோல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண்ணந்தப் பெண்ணல்லவோ?

சென்றேன் ம்ம் கண்டேன் ம்ம் வந்தேன்

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நானிருந்தேன்
உன் வடிவில் நானிருந்தேன்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லையே

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

No comments:

Post a Comment