Sunday, December 18, 2011

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டு செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே , என் மனதை விட்டு துள்ளாதே

(கண்ணாலே )

பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே
என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே , என் மனதை விட்டு துள்ளாதே

(கண்ணாலே )

பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் , படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே , என் மனதை விட்டு துள்ளாதே

(கண்ணாலே )

No comments:

Post a Comment