Monday, August 13, 2012

இதய வீணை தூங்கும்போது

இதய வீணை தூங்கும்போது
பாட முடியுமா ?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா ?
(இதய)

உதடு சிரிக்கும் நேரம்
உள்ளம் சிரிக்குமா ?
உருவம் போடும் வேஷம்
உண்மை ஆகுமா ?
விளக்கைக் குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா ?
வீட்டுக்குயிலைக் கூட்டில் வைத்தால்
பாட்டு பாடுமா.. ?
பாட்டு பாடுமா... ?
(இதய)

மனதை வைத்த இறைவன்
அதில் நினைவை வைத்தானே - சில
மனிதர்களை அறிந்து கொள்ளும்
அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் - மேனி
அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை
அடிமை செய்தானே..
அடிமை செய்தானே...
(இதய)

உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது ?
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது ?
பழுது பட்ட கோவிலிலே தெய்வமேது ?
பனி படர்ந்த பாதையிலே பயணமேது ?
(இதய)

No comments:

Post a Comment