Saturday, May 30, 2009

ஒரு வார்த்தை இரு பொருள்

ஒரு ‌சில வா‌ர்‌த்தைக‌ள் இர‌ண்டு அ‌ர்‌த்த‌ங்களை‌க் கொடு‌க்கு‌ம். பய‌ன்படு‌த்து‌ம் இட‌த்‌தி‌ற்கே‌ற்ப அத‌ன் பொரு‌ள் அமையு‌ம்.

திங்கள்: மாதம், நிலவு, கிழமை.

ஆறு: நதி, எண்ணின் பெயர்.

இசை: சம்மதித்தல், சங்கீதம்.

மாலை: பூமாலை, பொழுது.

நகை: புன்சிரிப்பு, அணிகலன்.

மதி: அறிவு, நிலவு, மதித்தல்.

வேழம்: யானை, மூங்கில், கரும்பு.

மெய்: உண்மை, உடம்பு.

உடுக்கை: ஆடை, இசைக்கருவி.

அன்னம்: சோறு, பறவை.

நாண்: கயிறு, வெட்கப்படுதல்.

வேங்கை: புலி, ஒரு வகை மரம்.

ஞா‌யிறு : ‌கிழமை, சூ‌ரிய‌ன்

No comments:

Post a Comment