Wednesday, September 2, 2009

கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி

கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி
தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய் அன்பு தோழி
நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன் உன்னால் தோழி
தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி
நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி

Well My Friend
I have something to say
I want you to listen
Listen to me
This is what I have to say
Here It Goes..

தாகம் என்று சொல்கிறேன்
மரக் கன்று ஒன்றை தருகிறாய்
பசிக்குது என்று சொல்கிறேன்
நெல்மனி ஒன்றை தருகிறாய்
உந்தன் கை விரல் பிடிக்கையில்
புதிதாய் நம்பிக்கை பிறக்குது
உந்தன் கூட நடக்கையில்
ஒன்பதாம் திசையும் திறக்குது
என் பயணத்தில் எல்லாம் நீ
கைக்காட்டி மரமாய் முளைத்தாய்
என் மனதை உழுது
நீ நல்ல விதைகளை விதைத்தாய்
என்னை நானே செதுக்க
நீ உன்னையே உலியாய் தந்தாய்
என் பலம் என்னவென்று எனக்கு
நீ இன்றுதான் உணர வைத்தாய்

கிழக்கே..

மழையோ உந்தன் புன்னகை
மனசெல்லாம் மெல்ல நனையுதே
வேருக்குள் விழுந்த நீர் துளி
பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே
உனக்குள் ஏற்ப்படும் உத்சவம்
என்னையும் குதூகலப் படுத்துதே
தோழி ஒருத்தி கிடைத்தால்
இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும்
இதுவரை இந்த உண்மை
ஏன் தெரியவில்லை எவர்க்கும்
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை
அதை உன்னால் உணர்ந்தேன் தோழி
படைத்தவன் கேட்டால் கூட
உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி

கிழக்கே..

No comments:

Post a Comment