Monday, September 7, 2009

நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே

நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேயே

(நானாக)

கீழ்வானிலே ஒளி வந்தது கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

(நானாக)

மணி மாளிகை மாடங்களும் மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போல் இல்லை அங்கு தாலாட்ட ஆள் இல்லை
தாய் வீடு போல் இல்லை அங்கு தாலாட்ட ஆள் இல்லை
கோயில் தொழும் தெய்வம் நீ இன்றி நான் காண வேறில்லை

(நானாக)

No comments:

Post a Comment