Sunday, March 3, 2013

கவிதை பாடு குயிலே

பாடல்: கவிதை பாடு குயிலே
படம்: தென்றலே என்னைத்தொடு
நடிகர்கள்: மோகன், ஜெயஸ்ரீ
இசை: இளையராஜா


கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே

நூறு வண்ணங்களில் சிரிக்கும் தூங்கும் புஷ்பங்களே
ஆசை என்னங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களே
வானவெளியில் வலம் வரும் பறவை
நானும் அதுபோல் எனக்கென்ன கவலை
காற்று என்பக்கம் வீசும் போது
காலம் என் பெயரை பேசும் போது
வாழ்வு எனது வாசல் வருது
நேரம் இனிதாக யாவும் சுகமாக

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே

கோயில் சிற்பங்களை பழிக்கும்
அழகான பெண் சித்திரம்
கோடி மின்னல்களில் பிறந்து
ஒளி வீசும் நட்ச்சத்திரம்
கூட எனது நிழல் என வருமோ
நாளும் இனிய நினைவுகள் தருமோ
பாவை பெண் கொண்ட பாசம் என்ன
பார்வை சொல்கின்ற பாடம் என்ன
நீல மலராய் மேனி மலர
நாளூம் தடுமாற நெஞ்சம் இடம் மாற

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே இனி இனிமையே
ரபப்பா பப்பா பப்பா பவ் பவ் பப்பா
ரபப்பா பவ் பவ் பவ் பவ் பப்பா

No comments:

Post a Comment