Sunday, March 3, 2013

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா? மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?(2)


மெல்ல நெருங்கிடும் போது நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நட‌க்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்...மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானுமோ காற்றாடி ஆகிறேன்
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும்,மண்ணில் வந்து சேர‌ அது பாலம் போடுதோ...ஓ
நீர்த்துளி நீந்தினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இட‌மெல்லாம் வீணையின் தரிச‌னம்
ஆயிர‌ம் அருவியாய்,அன்பிலே நட‌க்கிறாய்
வேகம் போல எனக்குள்ளே மோக மழைக்குள் நனைகிறாய்
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா? மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

No comments:

Post a Comment