Sunday, May 24, 2009

எழு தோழா!

எத்துனை நாளைக்கு தான் சிலந்தியையும்,முஹம்மத் கஜினியையும் விடாமுயற்சிக்கு
வித்தாய் சொல்லி கொண்டிருப்பது,பல பல முஹம்மத் கஜினிகள் வர வேண்டாமா?
முயற்சி பாதையில் முத்து குளித்து முன்னேற்ற பாதையில் முத்தெடுப்போம் வா
தடை கற்களை தகர்த்து விட்டு முன்னேற்ற கனியை எட்டி பறிக்க வேண்டாமா ?
போதும் பொங்குமா கடலாய் பொறுத்திருந்தது..

வீறு கொண்டு எழு தோழா !
உலகை முன்னேற்றுவோம்,இந்தியாவை முன்னேற்றுவோம்..

முயற்சி எனும் கல்லை,
பதமாய் தட்டி தட்டி செதுக்க முன்னேற்றமெனும்
சிலை மெய் காணும் காலம் முன்னேறி கொண்டு இருக்கிறது,
இன்ன பிற படைப்புகள் எல்லாம் முன்னேறி கொண்டு இருக்கிறது.
நாமும் முன்னேறுவோம் வா ..

சிந்தனையை பாங்காய் தீட்டி செயலாய் கொண்டு வா ,தடைகளை தடைபடுதிவிட்டு,
முன்னேற்ற பாதையில் வீறு கொண்டு முன்னேறுவோம்.
ஏறி சுடராய் இருந்தது போதும்,தீ சுடராய் வா ..

அலுத்து விட்டது பனிமலையாய் படுத்திருந்தது..
எழுந்து வா....
எரிமலையாய் முன்னேற்ற சிகரத்தில் மகுடம் சூடுவோம் ......

2 comments: