Monday, July 13, 2009

செந்தமிழ்த் தேன்மொழியாள்

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே...
நின்றது போல் நின்றாள் நெடுதூரம் பறந்தாள்
நிற்குமோ நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே...

செந்தமிழ்த் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
[நிலாவென...]
பைங்கனி இதழ்களில் பழரசம் தருவாள்
பருகிட தலைகுனிவாள்

காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ...
[காற்றினில்...]
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ?
[அவள் செந்தமிழ்த்...]

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கே பெண்ணே
பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ..
[செந்தமிழ்த்...]

No comments:

Post a Comment