Friday, July 24, 2009

ஒண்ணுமே புரியலே உலகத்திலே

ஒண்ணுமே புரியலே உலகத்திலே
ஒண்ணுமே புரியலே உலகத்திலே
என்னன்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியலே உலகத்திலே

கண்ணிலே கண்டதும் கனவாய் போனது
காதிலே கேட்டதும் கதியாய் ஆனது
கண்ணிலே கண்டதும் கனவாய் போனது
காதிலே கேட்டதும் கதியாய் ஆனது
என்னான்னு தெரியலே சொன்னாலும் விளங்கலே
என்னான்னு தெரியலே சொன்னாலும் விளங்கலே
என்னை போலே ஏமாளி எவனும் இல்லே
ஒண்ணுமே புரியலே உலகத்திலே

கண்ணான தந்தையை கண்ணீரிலே தள்ளினேன்
கண்ணான தந்தையை கண்ணீரிலே தள்ளினேன்
கண்ணாடி வளையலை பொன்னாக எண்ணினேன்
பெண்ணாசை வெறியிலே தன்மானம் தெரியலே
பெண்ணாசை வெறியிலே தன்மானம் தெரியலே
என்னை போல ஏமாளி எவனும் இல்லே…
ஒண்ணுமே புரியலே உலகத்திலே…

No comments:

Post a Comment