Friday, November 26, 2010

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னை துறத்துவது நிஜமா நிஜமா?

முதற்கனவு முதற்கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா?
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா?
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா?
சத்தியத்தில் உடைத்த காதல் சாகாது அல்லவா?
(முதற்கனவே..)

எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்
இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்
தொலைந்த என் கண்களை பார்ஹ்த்டதும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தைஅ எடுத்துவிட்டாய்
இதயத்தை தொலைததற்காக என் ஜீவன் எடுக்கிறாய்
(முதற்கனவே..)

ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை

தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
விண்ணில் நீயும் இருந்துக்கொண்டே விர்ல் நீட்டி திறக்கிறாய்
மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துலையிட்உவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து உன் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

படம்: மஜுனு
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, பாம்பே ஜெயஸ்ரீ

No comments:

Post a Comment