Sunday, April 26, 2015

பூ வாசம் புறப்படும் பெண்ணே

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!

உயிர் அல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்?
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி!


புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே

ஒரு வானம் வரைய நீலம் வண்ணம்
நம் காதல் வரை என்ன வண்ணம்?

உன் வெட்கத்தை விரல்தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா

(பூ வாசம்...)


ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?
உற்று பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது?
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது

நீ வரைய தெரிந்த ஒரு நவீன கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கவிஞன்
மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல
மடியோடு விழுந்தாயே
வா வா............
(பூ வாசம்...)

No comments:

Post a Comment