Saturday, June 20, 2009

போக்கிரி - டோலு டோலு தான் அடிக்கிறான்

பெண்
டோலு டோலு தான் அடிக்கிறான்
இரு தோலுந் தோலுந்தான் ஒரசுறான்
மேலும் கீழுமாய் இழுக்குறான்
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் நிறைவதும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

ஆண்
அய்ல அய்ல அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்ல ஒய்ல நீ சில்மிஷ ப்பேரா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா

பெண்
சுட சுட மழையை குளு குளு வெயிலை
முதல் முறை உலகத்தில் கண்டேனே
வெள்ளை நிற இரவை கரு நிற பகலை
முதல் முறை பார்த்தேனே

ஆண்
இடிகளை உரசி புயல்களை அலசி
நடந்தவன் நான் தானே
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க
முதல் முறை பயந்தேனே

பெண்
நீ ஞனன நமன நான் யரல வரல
நீ உடைந்து உருக நான் உணர்ந்து பருக
வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி
இடப்பக்கம் சுழலுது உன்னாலே
கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்
விரிந்தது குடை போலே

ஆண்
இருபது வருஷம் பறவையைப் போலே
சுற்றிச் சுற்றி திரிந்தேனே
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே வளைய
முழுவதும் தொலைந்தேனே

பெண்
நீ எனக்குள் நுழைய நான் உனக்குள் வளைய
நாம் நமக்குள் கரைய நம் உலகம் குறைய (புலி)

No comments:

Post a Comment