Tuesday, June 30, 2009

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதைத்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ கன்னி மனம் பாவம்
என்ன செய்ய கூடும் ?
உன்னை போல அல்ல
உண்மை சொன்னது நீ

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

உன்னை தவிர எனக்கு
விடியல் இருக்கோ கிழக்கு ?
உலகினில் உள்ளதோ உயிரே ?

சூரிய விளக்கில் சுடர்விடும் கிழக்கு
கிழக்குக்கு நீதான் உயிரே
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ நங்கை உந்தன் நெஞ்சம்
நான் கொடுத்த லஞ்சம்
வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது

சொன்னாலும் ... (தனனம் )
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது (தனனம் )

விழி சிறையில் பிடித்தாய்
விலகுதல் போல நடித்தாய்
தினம் தினம் துவண்டேன் தளிரே

நதியென நான் நடந்தேன்
நனை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன் கடலே
எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை

ஓ பூவெடுத்த நீரில்
கொட்டி வைத்து பாரு
வந்துவிடும் மேலே வஞ்சி கொடியே.

No comments:

Post a Comment