Monday, May 2, 2011

உன் தலை முடி உதிர்வதைக் கூட

உன் தலை முடி உதிர்வதைக் கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதோ
உன்னை நான் கண்டு சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ


உன் தலை முடி உதிர்வதைக் கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்.....

உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்
உயிரின் மீது பட்டுத் தெறிக்கும்
கைகள் பற்றி கொண்டே பேசிக் கொள்ளும் நேரம் இனிக்கும்
எதிர் வரும் காற்று உன் பெயரை என் மேல்
தினமும் கிறுக்கி விட்டுப் போகும்
நெற்றிப் பொட்டுக்குள்ளே கொட்டி விட்டேன் என்னை முழுதும்

உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன்
காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்
கையில் பட்ட என்னை உன் இதயப் பையில் வைத்து
என்னைக் கொடுப்பேன்


உன் தலை முடி உதிர்வதைக் கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
நீயும் என்னை தினம் தேட வேண்டும் என்று
தொலைந்து போக கொஞ்சம் ஆசை
நான் அணைத்துத் தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே
மேய்ச்சல் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்
மேய்த்துக்கொள் என்னை முழுதும்
தொட்டில் இன்றி தூங்கும் என் மார்பில் முத்தம் தினமும்

உன்னைப் பற்றி ஏதும்(?) காதல் கொடி நானே
உன் கை எழுத்தைத் தாங்கும் காகிதமும் நானே
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே


உன் தலை முடி உதிர்வதைக் கூட
தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட
ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே
மேகம் கண்ணீரை சிந்துதோ
உன்னை நான் கண்டு சேரவே
பூமி என்னோடு சுற்றுதோ

No comments:

Post a Comment