Monday, May 2, 2011

உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னை கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே


உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே


உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே


ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னை பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களை கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்க சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே...
தன்னை தருவாயோ இல்லை கறைவாயோ


உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே


நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னை தொட துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னை பார்த்த பின்னும்
உன்னை சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீயிருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமய மலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே
தன்னை தருவாயோ இல்லை கறைவாயோ


உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னை கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

No comments:

Post a Comment