Monday, May 2, 2011

பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு

பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்கச் செய்வேன் ஆரிரரோ
பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்கச் செய்வேன் ஆரிரரோ

அள்ளித் தந்த அன்னை சொல்லி தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ
அள்ளித் தந்த அன்னை சொல்லி தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ
கட்டித் தங்கம் என்று கன்னம் தட்டிக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிரரோ
..........பச்சை மரம் ...............

ஆசை கிளி அங்கே ஊமை கிளி இங்கே
தந்தை கிளி நெஞ்சில் அமைதி எங்கே
ஆசை கிளி அங்கே ஊமை கிளி இங்கே
தந்தை கிளி நெஞ்சில் அமைதி எங்கே
அன்னை என்ற தெய்வம் தந்து சென்ற செல்வம்
உன்னை எண்ணி வாழும் கலங்காதே(2)
...........பச்சை மரம்...............

No comments:

Post a Comment