Thursday, January 26, 2012

ஆலோலம் பாடி அசைந்தாடும்

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே…அதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே….
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு….
அமுதே என்கண்ணே பசும்பொன்னே….இனி துன்பம் ஏன் இங்கு….
ஆலோலம் பாடி அசைந்தாடும் கா….ற்றே…அதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூ……வே….

ஆ…ஆ… மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம் இன்பதுன்பம் என்றும் உண்டு…
தாயிழந்த துன்பம் போலே ….துன்பம் அது ஒன்றும் இல்லை….
பூமி என்ற தாயும் உண்டு….வானம் என்ற தந்தை உண்டு….
நீங்கிடாத சொந்தம் என்று….நீரும் காற்றும் எங்கும் உண்டு…
பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்…
தாயின்றி நின்றபிள்ளை தன்னை என்றும் காக்கும்….
நீகாணும் எல்லாம் உன்சொந்தம்….ம்…ம்…ம்…ம்…ம்

ஆலோலம் பாடி அசைந்தாடும் கா….ற்றே…அதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூவே….
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு….
அமுதே என்கண்ணே பசும்பொன்னே….இனி துன்பம் ஏன் இங்கு….
ஆலோலம் பா…டி அசைந்தாடும் கா.ற்றே…அதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூ……வே….

சோகமெதும் சுமையே இல்லை….சுகங்கள் கூட சுகமே இல்லை…
ஆதரவை தந்தால் கூட அதையும் இங்கு அறிந்தா இல்லை….
வந்ததுண்டு போனதுண்டு உன்கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு உன்கணக்கில் வரவே உண்டு…
ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்லக்கூடும்…
உலகமெந்தன் சொந்தம் என்று உந்தன் உள்ளம் பாடும்…
நீயாரோ அன்பே….அமுதே……எ…எ…எ…எ…

ஆலோலம் பாடி அசைந்தாடும் கா….ற்றே…அதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூ….வே….
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு….
அமுதே என்கண்ணே பசும்பொன்னே….இனி துன்பம் ஏன் இங்கு….
ஆலோலம் பா.டி அசைந்தாடும் காற்றே…அதை கேட்டு தூங்கும் ஆவாரம் பூ……வே….

No comments:

Post a Comment