Friday, January 27, 2012

நண்பனே எனது உயிர் நண்பனே

இந்த பாடல் எனது நட்புகளுக்காக
படம் : சட்டம் ( Sattam )
பாடல் : நண்பனே எனது உயிர் நண்பனே..... ( Nanbane Enathuyir Nanbane )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , மலேசியா வாசுதேவன்
இசை : கங்கை அமரன்
வருடம் : 21 May 1983

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

ஒரு கிளையில் ஊஞ்சாலடும்
இரு மலர்கள் நீயும் நாணும்
பிரியாமல் நாம் உறவாடலாம்

ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ

இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஒசை
இன்றும் என்றும் கேட்க வேண்டும்
எனது ஆசை ஹேய்.. ஹேய்..

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
நண்பனே எனது உயிர் நண்பனே

யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றாய்
அதற்காக நான் வழக்காடுவேன்

யாரும் உன்னை திருடி செல்ல
பார்த்திருக்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்

எனது மனமும் எனது னினைவும்
உனது வாசமே

நமக்கு யேது பிரித்து பார்க்க
இரண்டு மனமே ஹேய்.. ஹேய்..

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது

No comments:

Post a Comment