Friday, October 22, 2010

என் காதலே என் காதலே.....

என் காதலே என் காதலே.....
என்னை என்ன செய்யப் போகிறாய்?.....
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ......
ஏன் கண்ணிரண்டைகேட்கிறாய்?........
சிலுவைகள் சிறகுகள்....
ரெண்டில் என்ன தரப் போதிறாய் ?.....
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு ,
ஏன் தள்ளி நின்று பார்கிறாய் ?.....

காதலே நீ பூ எறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்,
காதலே நீ கல் எறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா....... இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா....... இல்லை போவதா
அமுதென்பதா..... விஷம் என்பதா.........
உன்னை அமுத-விஷமென்பதா? ........

காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து அழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா..... தடுமாற்றமா ?.......
என் நெஞ்சிலே...... பனி மூட்டமா ? ......
நீ தோழியா? இல்லை எதிரியா ?
என்று தினமும் போராட்டமா?......
என் காதலே.. என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய் ?.......

No comments:

Post a Comment