Monday, October 4, 2010

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ஆ ஆ ஆ ஆ..

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.

தத்தத்தோம் தரிகிடதோம் தளாங்குதோம்.
தகதிமிதோம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்.

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்... ஆஆ...

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்... ஆஆ...


பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே.. கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே..

மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி
மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி

கண்பாரயோ.. வந்து சேராயோ.. கண்ணம்மா.

யாவுமே சுக முனிபோல் ஈசனாம் எனக்கும் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா,

கண்ணம்மா கண்ணம்மா

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.

No comments:

Post a Comment