Saturday, February 12, 2011

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
திரைப்படம்: மணமகன் தேவை
இயற்றியவர்: கே.டி. சந்தானம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

கண்டவுடன் காதலே கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது என்
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது?
திண்டாடித் தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
திண்டாடித் தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

டரரடியா டாங் டரரடியா டாங் டரரடியா டாங் டரரடியா டாங்

No comments:

Post a Comment