Friday, February 11, 2011

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே… அன்பே…
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே… முன்பே…
கைகள் தானாய் கோர்த்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா…
(இன்னும்
ஆ: பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே
தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே
பெ: பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு…
ஆ: புதுப்புது விடுகதை தொடத் தொட தொடர்கிறதே….
பெ: இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே… அன்பே…
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே… முன்பே…
உன்னை சேர்த்தாள் பாவை இன்னும் இங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கார வேலா….
பெ: தேன்கள் இதை தூதுவிடும் நாயகனே மாயவனே
நூலிடையை ஏங்க விடும் வானமுத சாதனனே
ஆ: நீ தானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத் தேனி
பெ: தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திடவா(இன்னும்)

No comments:

Post a Comment