Friday, February 11, 2011

புயலே புயலே பொத்தி வச்ச புயலே

புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கும் புயலே(2)
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயோ ?
இது போல உனக்குள் வேறு திட்டம் போட்டாயோ?

விடிய விடிய தான் என்னை நினைக்கிறே
விடிஞ்சு முடிஞ்சதும் நேரில் பார்க்குறே
கிட்டே வந்து தான் விலகி நிக்குற டாலி டாலி டோய்
உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுச்சு
பேசி பார்த்ததும் காதல் வெடிச்சது டாலி டாலி டோய்

(புயலே புயலே ...)

பம்பரம் போலே நீ என்னை ஆட வச்சியே
சாட்டை ஏதும் இல்லாமலே சுத்த வச்சியே
ரயில் 'ஏ போல தான் நான் ஓடும் போதெல்லாம்
தாவணிய காட்டி காட்டி நிற்க வச்சியே
எந்தன் மனசை நீ பேச வச்சியே
உந்தன் பேரை சொல்லி சொல்லி சீண்டி பார்க்குதே
வெட்கம் வீசியே என்னை கூச வச்சியே
உன்னை உன்னை பார்க்கும் போதும் கண்கள் கூசுதே
வெட்கப்பட்டதாறு நீ கிட்ட வந்து பாரு
எண்ணப்படி கட்டி புடி டாலி டாலி டோய்

(புயலே புயலே ...)

யார பார்த்தாலும் அட நீதான் தெரியுரியே
கண்ணு ரெண்டும் கேட்டு போச்சோ ஒண்ணும் புரியலையே
ஊரு கண்ணெல்லாம் உன் மேலே பட்டிருக்கோ
முச்சந்தியில் மண்ணெடுத்து சுத்தி போட்டுக்கோ
உன் பேர் சொல்லித்தான் யார் பேசி போனாலும்
எனக்கே ஜாடை சொல்லுவதாக ஏனோ தோணுதடி
என்ன சொன்னாலும் அது உண்மை இல்லையே
நானும் உன்னை போலே உள்ளே ரொம்ப தொல்லையே
எனக்குள்ளே பாதி நீ இருப்பதா சேதி
வதந்தியும் உண்மை தான டாலி டாலி டோய்

No comments:

Post a Comment