Saturday, February 12, 2011

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே

திரைப்படம்: பலே பாண்டியா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1962

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேதம் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

நானிருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியல்லே - இப்போ
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் தெரியல்லை
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்ககுதடா - அட
உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு வெளீயில் நிற்குதடா
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா - அட
என்னத்தச் சொல்வேண்டா தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

No comments:

Post a Comment