Friday, February 11, 2011

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

ம்….ம்…..ம்….ம்…..
ம்….ம்…..ம்….ம்…..


இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

ம்….ம்…..ம்….ம்…..

இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே

ம்….ம்…..ம்….ம்…..

கண்ணை மூடி உன்னைக் கண்டால்
அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்டால்
அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே

இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே……….

வெள்ளச் சேதம் வந்தால் கூட
தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால்
என்ன செய்வது

முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால்
ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன்
நித்தம் யுத்தம் தான்

சொல்லித் தீரா
இன்பம் கண்டு
எந்தன் நெஞ்சு
கூத்தாட‌…

மின்னல் கண்ட
தாழை போல
உன்னால் நானும்
பூத்தாட‌…..

உன்னைக் கண்டேன்
என்னைக் காணோம்
என்னைக் காண
உன்னை நானும்

இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே….
இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே…..

எந்தன் வாழ்வில் வந்ததின்று
நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே
செல்ல விருப்பம்

நெஞ்ச வயல் எங்கும் உன்னை
நட்டு வைக்கிறேன்…
நித்தம் அதில் காதல் உரம்
இட்டு வைக்கிறேன்

உன்னைக் காண
நானும் வந்தால்
சாலை எல்லாம்
பூஞ்சோலை….

உன்னை நீங்கி
போகும் நேரம்
சோலை கூட
தார்ப்பாலை…

மண்ணுக்குள்ளே
வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே

இப்பவே இப்பவே
பேசணும் இப்பவே

கண்ணுக்குள்ள‌ உன்னைக் கண்ட
அப்பவே அப்பவே

கைவளையல் ஓசை கேட்ட
அப்பவே அப்பவே

ஆடை வாசம் நாசி தொட்ட
அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன்
அப்பவே அப்பவே

No comments:

Post a Comment