Saturday, March 19, 2011

இது சங்கீத திருநாளோ

இது சங்கீத திருநாளோ!

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..

கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்..

கண்களை பின்புறம் வந்து மூடுவாள்..

செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்..

தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்..

உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்..

அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்..

பூவெல்லாம் இவை போல அழகில்லை..

பூங்காற்றில் இவை போல சுகமில்லை..

இதுபோல சொந்தங்கள் இனியில்லை..

எப்போதும் அன்புக்கு அழிவில்லை..

இவள்தானே நம் தேவதை..

நடக்கும் நடையில் ஒரு தேர் வலம்..

சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்;

கண்ணில் மின்னும் ஒரு காவியம்;

மனதில் வரைந்து வைத்த ஒரு ஓவியம்;

நினைவில் மலர்ந்து நிற்கும் ஒரு பூவனம்..

என்றும் எங்கும் இவள் ஞாபகம்..

இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்..

இருபக்கம் காக்கின்ற கரையாவேன்;..

இமையாடும் பொன்னூஞ்சல் நானாவேன்..

இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்..

எப்போதும் தாலாட்டுவேன்..

சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..

கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீத திருநாளே!

No comments:

Post a Comment