Sunday, March 20, 2011

நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ

நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கண்டு தவிப்பதேனோ
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு ஸ்னேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டுமே
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே

சின்னச்சின்ன அத்துமீறல் புரிவாய்
என் Cell எல்லாம் பூக்கள் பூக்கச்செய்வாய்
மலர்களில் மலர்வாய்
பூப்பரிக்கும் பக்தன்போல மெதுவாய்
நான் தூங்கும்போது விரல்நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி
சேவைகள் செய்யவேன்டும்
நீயழும்போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு ஸ்னேகிதனே
நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கண்டு தவிப்பதேனோ
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி


சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்புமூட்டை சுமப்பேன்
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வேளை வரும்போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்
(ஸ்னேகிதனே)

No comments:

Post a Comment