Tuesday, March 22, 2011

அத்திரி பத்திரி கத்திரிக்கா

அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
என் படிப்ப நான் தொலைச்சேன்
என் மனச நான் தொலைச்சேன்
கணக்கு புக் தொறந்தா
உன் காதல் முகம் தோணும்
காம்பஸ் போல தானே
என் கண்ணு உன்ன சுத்தும்
என் மாமா மகன் நீங்க
என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?

பரீட்சை எழுதும் நேரம்
உன் சிரிப்பு தானே - நெனச்சாலே
பிள்ளையார் சுழிய நெனச்சி
உன் பேரை தானே - வரைஞ்சாலே

ஸ்ரீ ராமஜெயம் எனக்கு எனக்கு உன்
பேர்தான் பேர்தான் இனிமேலே
கிளிபிள்ளையாய் தினமும் தினமும்
அதை சொல்வேன் சொல்வேன் தன்னாலே


திருக்குறளாய் திருக்குறளாய் உந்தன்
குரல்தான் உனக்கு உனக்கு
தலைநகரம் தலை நகரம் உந்தன்
தெருதான் உனக்கு உனக்கு
உயிரே உயிரே .....
என் மாமா மகன் நீங்க என்
அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ

ஒருநாள் ஒருநாள் ஒருநாள் ஓரு
காதல் பூதம் - புடிச்சிருச்சு
மறுநாள் மறுநாள் மறுநாள் அது
உன்பேர் சொல்லி - கடிச்சிருச்சு
உதடுகளை உணவாய் உணவாய்
அது கேட்கும் கேட்கும் தினம்தோறும்

ஊருசனம் உறங்கிய பின்னே அது
முழிச்சி மெதக்கும் கதவோரம்
குலசாமி திருநீறு வெச்சு பார்த்தேன்
அது நீ இல்ல
குத்தாலம் கோவிலில் தாலி கட்ட
சொல்லிச்சு நில்லு
உயிரே உயிரே ......

என் மாமா மகன் நீங்க என்
அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ


அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
என் படிப்ப நான் தொலைச்சேன்
என் மனச நான் தொலைச்சேன்
கணக்கு புக் தொறந்தா
உன் காதல் முகம் தோணும்
காம்பஸ் போல தானே
என் கண்ணு உன்ன சுத்தும்
என் மாமா மகன் நீங்க
என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ

No comments:

Post a Comment