Saturday, March 19, 2011

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா...ஆஆ ஆஆ ஆஆஆஆ
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலை இல்லையே
வெத்தலைய மடிச்சி மாமன் அதை கடிச்சி
துப்ப ஒரு வழி இல்லையே
ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிச்சு
ஆட ஒரு ஓடை இல்லையே
இவ்வூரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு
அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா...ஆஆ ஆஆ ஆஆஆஆ
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

மாடு கண்ணு மேய்க்க மேயுறதப் பார்க்க
மந்தைவெளி இங்கு இல்லையே
ஆடுபுலி ஆட்டம் போட்டு விளையாட
அரசமர மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்டைவண்டி ஓட்டி
கானம் பாட வழி இல்லையே
தோழிகளை அழைச்சி சொல்லிச் சொல்லி ரசிச்சி
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தைப்போல அட இங்கே உள்ள வாழ்க்கை
இதை எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
நம்மூரப்போல ஊரும் இல்ல

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா...ஆஆ ஆஆ ஆஆஆஆ
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

No comments:

Post a Comment