Sunday, March 20, 2011

உன் சமையல் அறையில்நான் உப்பா சர்க்கரையா

உன் சமையல் அறையில்நான் உப்பா சர்க்கரையா
நீ படிக்கும் அறையில்நான் கண்களா புத்தகமா

நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா
நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா
நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா
நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா, கன்னங்களா
நான் தீண்டல் என்றால் நீ விரலா, ஸ்பரிசங்களா
நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா, தாலாட்டா
நீ தூக்கம் என்றால் நான் மடியா, தலையணையா
நான் இத்யம் என்றால் நீ உயிரா, துடிதுடிப்பா

நீ கவிதைகள் என்றால் நான் வேரா விதை நிலமா
நீ விருந்து என்றால் நான் பசியா, ருசியா
நீ கைதி என்றால் நான் சிறையா, தண்டனையா
நீ மொழிகள் என்றால் நான் தமிழா, ஓசைகளா
நீ புதுமை என்றால் நான் பாரதியா, பாரதிதாசனா
நீ தனிமை என்றால் நான் துணையா, தூரத்திலா
நீ துணைதான் என்றால் நான் பேசவா, யோசிக்கவா
நீ திரும்பி நின்றால் நான் நிற்கவா, போய் விடவா
நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா
நீ காதல் என்றால் நான் சரியா தவறா

உன் வலது கையில் பத்து விரல்
பத்து விரல் ....
என் இடக்கையில் பத்து விரல்
பத்து விரல் ...
தூரத்து மேகம் தூரல்கள் சிந்த தீர்த்த மழையில் தீக்குளிப்போம்

No comments:

Post a Comment