Tuesday, March 22, 2011

எப்ப நீ என்னைப் பாப்ப

எப்ப நீ என்னைப் பாப்ப
எப்ப என் பேச்சைக் கேப்ப
எப்ப நான் பேச கெட்ட பையா
எப்போடா கோபம் கொறையும் எப்படா பாசம் தெரியும்
எப்ப நான் பேச கெட்ட பையா
நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன் நிஜமாக உந்தன் முன்னால் தடுமாடுறேன்
ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வாலாட்டுறேன்
உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும் திரும்பிப் பார்ப்பாயா

கண்ணைக் கட்டிக்கொண்டு உன் பின்னால் காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயமில்லை நீ வா
மலையை சுமக்கிற பலமுனக்கு மலரை ரசிக்கிற மனமுனக்கு
இனிமேல் போதும் நீ எனக்கு நீ வா
உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா
உன் கோபம் கூட நியாயமென்று ரசித்தேனடா
நீ தீயாயிரு எனைத் திரியாய்த் தொடு நான் ஒளி பெற்றே வாழ்வேனடா

அட என்னைத் தவிர எல்லாப் பேரும் ஆணாய் ஆனாலும்
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்றேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்ற சொல்லே வேண்டாம் டா

எரிமலை கண்கள் ரெண்டு பனிமலை இதயம் ஒன்று உன்னிடம் கண்டேன் கெட்ட பையா பூமியில் ஆம்பளை என்று உன்னை தான் சொல்வேன் என்று
வேறென்ன சொல்ல கெட்ட பையா
உன்னாலே அச்சமின்றி நான் வாழுறேன்
உன்கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்
இந்தப் பூமிப்பந்தை தாண்டி போக முடியாது டா
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதுடா
என் நிலவரம் உனக்கு புரிய வில்லையா

No comments:

Post a Comment